மேலும் தனிமையை நீடிக்கும் பிரிட்டன் பிரதமர்!

மேலும் தனிமையை நீடிக்கும் பிரிட்டன் பிரதமர்!

Update: 2020-04-04 14:23 GMT

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்த பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன் மேலும் அவருடைய தனிமையை நீடிக்கிறார்.

பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன் சென்ற மார்ச் 27ஆம் தேதி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதியானது. அதன் பிறகு அவரை தன்னை தனிமைப்படுத்தி கொண்டார்.

இதனைப் பற்றி அவர் கூறியது: சென்ற வாரத்தில் இருந்து நான் தனிமையில் இருந்து வருகிறேன். தற்போது நலமாக இருக்கிறேன். ஆனால் காய்ச்சலும் மற்றும் சிறிது சோறும் உள்ளது. இதனால் மருத்துவரின் ஆலோசனைப்படி மேலும் சில நாட்களுக்கு தனிமையில் இருக்க முடிவு செய்துள்ளேன்.



https://twitter.com/BorisJohnson/status/1246042407973662721

அரசியல் நடவடிக்கைகள் சரியாக நடைபெற்று வருகிறது. மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். யாரும் வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருக்க வேண்டும்.

தொற்றறை பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அரசு விதிக்கும் உத்தரவுகளுக்கு மக்கள் அனைவரும் கட்டுப்பட்டு தங்களை தாங்களே தனிமையில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன் கூறியுள்ளார். 

Similar News