தாய் - குழந்தையை காப்பாற்ற தாவி குதித்து சென்ற ஜல்லிக்கட்டு காளை! வைரலானது வீடியோ!

தாய் - குழந்தையை காப்பாற்ற தாவி குதித்து சென்ற ஜல்லிக்கட்டு காளை! வைரலானது வீடியோ!

Update: 2020-01-18 10:25 GMT

பொங்கலுக்குப் பிறகு தமிழ்நாடு முழுவதும் ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு போட்டிகள் வெகு விமர்சையாக அனைத்து இடங்களிலும் நடைபெற்று வருகிறது,இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் சிராவயலில் நேற்று மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது, இந்த மஞ்சுவிரட்டு போட்டியில் 300 க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.







இந்த மஞ்சுவிரட்டு போட்டியின் போது, எதிர்பாராத விதமாக போட்டியின் முன்னர் ஆவேசத்துடன் ஒரு காளை ஓடியது அப்போது எதிர்பாராதவிதமாக குழந்தையுடன் ஒரு தாய் எதிரே வந்ததால் அங்கிருந்தவர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.


அங்கிருந்தவர்கள் அவரை அமரும்படி கூச்சலிட்டனர்,நொடி பொழுதில் அவர்கள் அமரவே ஆவேசத்துடன் வந்த காளை குழந்தையுடன் இருந்த அந்தத் தாயே கண்டதும் ஏதும் செய்யாமல் தாண்டி குதித்து சென்றது இதனால் தாயும் குழந்தையும் அதிர்ஷ்டவசமாக நொடிப் பொழுதில் உயிர் தப்பினர் இந்த சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது மேலும் இந்த வீடியோவும் புகைப்படமும்  சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.



Similar News