புதுச்சேரி : மூடப்பட்ட கடற்கரை சாலை.!
புதுச்சேரி : மூடப்பட்ட கடற்கரை சாலை.!
புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதுவரை புதுச்சேரியில் 402நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே புதுச்சேரி கடற்கரை சாலையில் சமூக இடைவெளியை கடைபிக்காமல் நடை பயிற்சி மேற்கொள்வதால் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்பதால் இன்று முதல் அடுத்த 10 நாட்களுக்கு கடற்கரை சாலை மூடப்பட்டுள்ளது இதனால் கடற்கரை சாலையில் நடை பயிற்சி மேற்கொள்ள வந்தவர்களை போலீசார் திருப்பி அனுப்பி மேலும் 10 நாட்களுக்கு கடற்கரை சாலையில் நடை பயிற்சி மேற்கொள்ள அனுமதி இல்லை என்றும் அவர்களிடம் தெரிவித்தனர். பொதுமக்கள் அனுமதிக்காத காரணத்தால் கடற்கரை சாலை வெறிச்சோடி காணப்படுகிறது.