உடல் பலம் மட்டும் போதாது மனம் பலம் பெற என்ன செய்ய வேண்டும்?

உடல் பலம் மட்டும் போதாது மனம் பலம் பெற என்ன செய்ய வேண்டும்?

Update: 2020-06-18 02:10 GMT

வாழ்வில் மிகப்பெரிய நன்மாற்றங்களை ஏற்படுத்துவதற்க்கு நாம் செய்ய வேண்டியவைகள் மட்டும் காரணமல்ல. எதையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பதும் முக்கிய அம்சமாக அமைகிறது.

சர்வதேச அளவில் எடுக்கப்பட்ட ஓர் இணைய கருத்துக்கணிப்பு, "மனதளவில் பலமிக்கவர்கள் பின்வரும் 5 விஷயங்களை வாழ்வில் செய்வதில்லை" என கூறுகிறது.

1. இறந்தகாலத்தில் உழல்வதில்லை 

மனதளவில் பலமிக்கவர்கள் அன்றைய நொடிபொழுதில் வாழ்கிறார்கள் அதற்கும் மேலாக மிக நெருக்கமான வருங்காலத்தை பற்றி மட்டுமே சிந்திக்கிறார்கள். கடந்தகாலம் என்பது கட்டுபாட்டில் இல்லை. எதிர்காலம் என்பது எதிர்பார்ப்பும், யூகங்களும் நிறைந்தது என்று அவர்களுக்கு புரிகிறது. எனவே அன்றைய நொடிபொழுதில் வாழ்கிறார்கள்.

2. செளகரியமான நிலையில் நெடுங்காலம் இருப்பதில்லை

வெற்றி என்பது நிரந்தரமல்ல அது அடுத்த இலக்கின் துவக்கம் மட்டுமே. இந்த நிதர்சனத்தை புரிந்துகொண்டு மனதளவில் பலமிக்க மனிதர்கள் தங்களின் செளகரியமான இடங்களை வெகு விரைவில் தாண்டி விடுகிறார்கள். காரணம் அது அந்த தருணத்தில் சுகமானதாக தெரிந்தாலும் தொடர்வெற்றியை யாசிக்கிற எந்த சாதனையாளருக்கும் செளகரியமான இடம் என்பது ஆபத்தான பகுதி, கொஞ்சம் தவறினாலும் குட்டை போல் நம் வெற்றிகளும், திறன்களும் ஓர் இடத்தில் தேங்கிவிடக்கூடும். எனவே சுகமான இடங்களில் இவர்கள் இருப்பதில்லை.

3. இவர்களுக்கான முடிவினை மற்றவர்கள் எடுக்க அனுமதிப்பதில்லை

நம் முடிவை நாமே எடுக்க வேண்டும் என்று நம்புகிறார்கள். நம் முடிவுகளை, நமக்கான முடிவுகளை மற்றவர்கள் எடுக்க அனுமதிப்பதென்பது நம்முடைய கடமையை, பொறுப்பை ஒத்திவைப்பதற்க்கு ஒப்பானது. ஒருவருக்கு தோற்றுபோவதற்க்கு தைரியமில்லையெனில், அவர்களுக்கு போராடி வெற்றிபெறுவதற்க்கும் தைரியமில்லை என்பதே அர்த்தம் என்பதை உணர்ந்தவர்கள் இவர்கள்.

4. மாற்றத்தை கண்டு அஞ்சுவதில்லை

மனதளவில் பலம் மிக்கவர்களுக்கும், பலமற்றவர்களுக்கும் இருக்கும் முக்கிய வித்தியாசமே, "மாற்றம் என்பது மாற்றமற்றது" என்பது குறித்த புரிதல் தான். மாற்றத்தை தவிர்க்க முடியாது என்பதை மனோபலமிக்கவர்கள் புரிந்து கொள்கிறார்கள், ஏற்றுகொள்கிறார்கள். மாற்றத்தை ஏற்றுக்கொள்ளமுடியாமல் யதார்த்தத்துடன் போராடுவது நேர மற்றும் ஆற்றல் விரியம் என்பதை நம்புகிறார்கள்.

5. பிறரின் வெற்றியில் பொறாமை கொள்வதில்லை

பிறர் பெறும் வெற்றி நாமும் வெற்றி பெற போகிறோம் என்பதற்க்கான பாடம். பிறர் பெறும் வெற்றிகள் நம்மை ஊக்கப்படுத்தவதற்க்காக 'இயற்கையால் நிகழ்த்தப்படுகிறது' என்பதை இவர்கள் உணர்ந்துள்ளனர்.

Similar News