செங்கல்பட்டு : கோவில் பூசாரியின் பூணூலை அறுத்து, இருவர் தாக்குதல் - அதிர்ச்சி சம்பவம்.!
செங்கல்பட்டு : கோவில் பூசாரியின் பூணூலை அறுத்து, இருவர் தாக்குதல் - அதிர்ச்சி சம்பவம்.!
செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த மதுராந்தகம் வரதராஜ பெருமாள் கோவிலில் பணிபுரியும் பூசாரியின் பூணூல் இரண்டு கிறிஸ்தவர்களால் அறுக்கப்பட்டும் ,அவர் தாக்கப்பட்டதாகவும் அதிர்ச்சியூட்டும் சம்பவத்தின் செய்தி வெளியாகியுள்ளது.
அக்கோவிலின் தினசரி நடவடிக்கைகளைத் தனது குடும்பத்தாருடன் கவனித்துவரும் கண்ணன் பட்டாச்சார்யா, அன்று வழக்கம்போல் மாலை ஆரத்தியை நடத்திக்கொண்டு இருக்கும்போது இரண்டு நபர்கள் போதை நிலையில் கோவில் கருவறையைப் புகைப்படம் எடுக்க முயற்சினர். இதைக் கண்டித்த பூசாரி மற்றும் அவர்களைத் தடுக்கவந்த குடும்பத்தினரையும் அவர்கள் தாக்கியுள்ளனர். தமிழ்நாட்டில் கோவில் கருவறையைப் புகைப்படம் எடுப்பது குற்றமாகும்.
பூசாரி காவல்நிலையத்தில் புகாரளித்த போதும் காவல்துறை குற்றவாளிகளைக் கைதுசெய்ய முன்வரவில்லை என்று கூறப்படுகின்றது. இந்து முன்னணி மற்றும் அந்தணர் முன்னேற்றக் கழகம் இச்சர்ச்சையை முன்னெடுத்து அந்த பூசாரியைத் தொடர்புகொண்டுள்ளனர். அதன் வழக்கறிஞர் ராஜாளி ஜெயப்பிரகாஷ், பூசாரியை தொடர்புகொண்டு சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க உதவி செய்வதாக உறுதியளித்ததாக முகநூலில் பதிவிட்டுள்ளார். மேலும் காவல்துறையைத் தொடர்புகொண்டு குற்றவாளிகளின் மேல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று எச்சரித்துள்ளனர்.
AMK , கண்ணன் பட்டாச்சார்யாக்கு உள்ளூர் வட்டாரங்கள் மூலம் உதவி செய்து அக்குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். குற்றவாளிகளான பேட்ரிக் செல்வம் மற்றும் சகாய நகரைச் சேர்ந்த அந்தோணி இருவரும் தங்கள் வாழ்க்கை பாதிக்கப்படும் என்று வழக்கைத் திரும்பப்பெறுமாறு வேண்டினர்.பெரிய மனது படைத்த பூசாரி வழக்கைத் திரும்பப்பெறுவதாகவும் கடவுளின் முன்பு மன்னிப்பு கோரவேண்டும் என்று கூறினார். அவ்விருவரும் ஒப்புக்கொண்டு மன்னிப்பு கடிதமும் வழங்கினர்.