கமலஹாசன் ட்வீட், புத்தகத்திற்குள்ளும், கணினிகளுக்குள்ளும் பயில்வது மட்டும் கல்வி அல்ல.!
கமலஹாசன் ட்வீட், புத்தகத்திற்குள்ளும், கணினிகளுக்குள்ளும் பயில்வது மட்டும் கல்வி அல்ல.!
ஒவ்வொரு வருடமும் உலகம் முழுவதும் ஜூலை 15ஆம் தேதி உலக இளைஞர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் இன்றைய நிலையில் கமலஹாசன் சமூக வலைத்தளங்கள் மூலமாக கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் இளைஞர்களின் திறமையை குறித்தும், இன்றைய கல்வியை குறித்தும் பகிர்ந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுவது நம்மை மேம்படுத்திடுவே கல்வி என்பதை மறந்து புத்தகத்திற்குள்ளும், கணினிகளுக்குள்ளும் மாணவர்களை அமிழ்த்தி கொண்டிருக்கிறோம். என்று கருத்து தெரிவித்திருந்தார். அவர் இதற்கு வெளியிலும் கல்வி உள்ளது. எனவே இதைப்பற்றி பேச தகுந்த நேரம் எனக்கு கிடைக்கவில்லை இதுவே சரியான நேரம் என்பதால் நான் இன்று இந்த கருத்தை தெரிவித்து கொள்கிறேன் என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
இது குறித்து இளைஞர்கள் நல்ல கருத்தை தெரிவித்து இருக்கிறார்கள் என்றும் மேலும் டுவிட்டரில் நன்றி தெரிவித்து வருகின்றனர்.