அ.தி.மு.க எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனன் முழுமையாக கொரோனாவில் இருந்து குணமடைந்தார்.!

அ.தி.மு.க எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனன் முழுமையாக கொரோனாவில் இருந்து குணமடைந்தார்.!

Update: 2020-07-09 12:13 GMT

கோயம்புத்தூர் மாவட்டத்தின் தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன் கொரோனா வைரஸிருந்து நான்கு நாட்களில் குணம் அடைந்துள்ளார்.

கோயம்புத்தூர் மாவட்டத்தின் தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏவாக அம்மன் அர்ஜுனன் இருந்து வருகிறார். இவர் செல்வபுரம் அருகிலுள்ள திருநகர் என்கிற பகுதியில் வசித்து வருகிறார். இவருடைய மகள் குடும்பத்தினரோடு மதுரைக்கு சென்று வந்துள்ளனர். இதனை தொடர்ந்து அவருடைய வீட்டில் இருக்கும் ஒன்பது பேருக்கும் சென்ற மாதம் 29 ஆம் தேதி கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

இந்த பரிசோதனையில் எம்எல்ஏவின் மகள், அவருடைய மருமகன், பேத்தி ஆகிய மூன்று பேருக்கும் கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகி உள்ளது. இதன் பின்னர் அவர்கள் மூன்று பேரையும் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது.

இதன் பிறகு கடந்த 5ஆம் தேதி எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனனும் கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியது.இதனை தொடர்ந்து அவரை இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்தது.

தற்போது இவருடைய பேத்தி கொரோனாவில் இருந்து குணமடைந்த நேற்று வீட்டுக்கு சென்றார். இன்று எம்.எல்.ஏ., அம்மன் அர்ஜூனன், அவருடைய மகள், மருமகன் ஆகியோர் முழுமையாக குணம் அடைந்து வீட்டுக்கு சென்றுள்ளனர்.

கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் சிறப்பாக சிகிச்சை கொடுக்கப்படுகிறது அதன் நான் விரைவில் குணம் அடைந்தேன் மற்றும் மருத்துவ குழுவுக்கு பாராட்டு என எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.   

Similar News