ரஜினியை கொண்டாடிய சுஷாந்த் சிங்கின் தில் பெச்சாரா திரைப்படம் - ரஜினி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு.!

ரஜினியை கொண்டாடிய சுஷாந்த் சிங்கின் தில் பெச்சாரா திரைப்படம் - ரஜினி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு.!

Update: 2020-07-25 12:44 GMT

சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்த கடைசிப் படமான தில் பெச்சாராவை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த மாதம் மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இவரது தற்கொலைக்கு பாலிவுட்டில் உள்ள வாரிசு அரசியல்தான் காரணம் என ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடைசியாக நடித்த தில் பெச்சாரா படம் நேற்று வெளியானது. இந்தப் படத்திற்கு ரஜினி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சமூக வலைதளங்களில் தில் பெச்சாரா படம் குறித்து நெட்டிசன்கள் புகழ்ந்து வருகின்றனர். ரஜினியின் ரசிகர்களும் தில் பெச்சாரா படத்தையும் சுஷாந்தையும் கொண்டாடி வருகின்றனர்.

மேலும் இவர் தனது செல்போன் கவரில் கூட ரஜினியின் படத்தை ஒட்டி வைத்திருப்பார். நான் ரஜினியை வணங்குகிறேன் என்றும் கூறியிருப்பார். அதோடு தமிழில் இடம் பெறும் வார்த்தையான சரி என்ற வார்த்தையையும் அடிக்கடி பயன்படுத்தியிருப்பார். மேலும் இந்த படத்தில் ரஜினியின் சிவாஜி பட காட்சியும் இடம் பெற்றிருக்கும். அதேபோல் ஒரே காட்சியில் வந்து செல்லும் சயிஃப் அலிகானும் ரஜினியை தலைவா என்று சொல்லி அவரது ஸ்டைலில் கண்ணாடியை கழட்டி போடுவார். இப்படி படம் முழுக்க சுஷாந்துடன் ரஜினியும் வியாப்பித்திருக்கிறார்.

இந்த நெட்டிசன், படத்தில் இடம்பெற்ற ரஜினி குறித்து சுஷாந்து சிங் கூறும் நான் ரஜினிகாந்தை வணங்குகிறேன் என்ற டயலாக்கை குறிப்பிட்டு தில் பேச்சராவில் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் உரையாடல் தலைவர் ரசிகர்களை வென்றுள்ளது என பதிவிட்டுள்ளார்.

Similar News