மோசடி செய்த ரம்யாவின் மீது பொது அறிவிப்பை விட்ட விஷாலின் தயாரிப்பு நிறுவனம்.!

மோசடி செய்த ரம்யாவின் மீது பொது அறிவிப்பை விட்ட விஷாலின் தயாரிப்பு நிறுவனம்.!

Update: 2020-07-16 10:17 GMT

நடிகர் விஷால் அவர்களின் தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரியில் கணக்காளராக பணிபுரிந்து வந்தவர் ரம்யா. இவர் 45 லட்சம் மோசடி செய்ததாக கூறி விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் மேலாளரான ஹரி, சென்னையில் உள்ள வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து காவல் நிலையத்தில் விசாரித்து வருகின்றனர்.

அதனையடுத்து சென்னை விருகம்பாக்கம் குற்றப்பிரிவு காவல்துறையினர் மோசடி தொடர்புடைய பிரிவின் கீழ் 7.7.2020 அன்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதனையடுத்து ஊடகமொன்று பேட்டி கொடுத்த ரம்யா தனக்கும்,தனது குடும்பத்திற்கும் உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும், தான் மோசடி செய்ததாக கூறியதை மறுக்கவும் செய்திருந்தார்.

இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு விஷாலின் தயாரிப்பு நிறுவனம் இயக்குனர் ஹரி கார் கண்ணாடி உடைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனிடையே இப்படி ஒரு தகவல் வெளியானதை அடுத்து ரம்யா விற்கும் விஷால் பிலிம் பேக்டரியின் கணக்கு தொடர்பான எந்த விஷயங்களிலும் ரம்யாவை தொடர்பு கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் இதையும் மீறி அவர்களிடம் தொடர்பு வைத்திருக்கும் நபர்களுக்கும் பிலிம் ஃபேக்டரிக்கும்  சம்பந்தமில்லை என தெரிவித்துள்ளனர்.

Similar News