ஊடகங்களின் பின்புலத்தில் தி.மு.க! தி.மு.க. பின்புலத்தில் கிறிஸ்தவ மிஷினரிகள்? உண்மைகளை வெளிக்கொண்டுவரும் மிஷன் காளி இயக்கம்.!
ஊடகங்களின் பின்புலத்தில் தி.மு.க! தி.மு.க. பின்புலத்தில் கிறிஸ்தவ மிஷினரிகள்? உண்மைகளை வெளிக்கொண்டுவரும் மிஷன் காளி இயக்கம்.!
தமிழக பொது ஊடகங்களை திரைமறைவில் இருந்து தி.மு.க. கட்டுப்படுத்தி வருகிறது என்று பிரபல சமூக ஆர்வலர் மாரிதாஸ் சில தினங்களுக்கு முன்பு ஆதாரங்களுடன் வீடியோக்களை வெளியிட்டார். இந்த வீடியோ இந்திய ஊடகவியலாளர்களுக்கு மத்தியில் பெரும் புகைச்சலை கிளப்பி வருகிறது. தி.மு.க. பிடியிலிருந்து ஊடகங்களை விடுவிக்கவேண்டும் என்று சமூக வலைதளங்களில் மக்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
இது ஒருபுறமிருக்க, சில தினங்களுக்கு முன்பு ஒன்றிணைவோம் திட்டத்தின் கீழ் தனது நிர்வாகிகளை சந்தித்து தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பேசினார். அப்போது வேடசந்தூர் தொகுதியில் உள்ள குஜிலியம்பாறை தி.மு.க. ஒன்றிய செயலாளர் சீனிவாசன், 'தலைவா, ஆரியர்கள் விநாயகர் மற்றும் விநாயகர் சதுர்த்தியை அவர்களுக்கு சொந்தமானதாக கருதுகிறார்கள். நாங்களும் கடவுளை வணங்குபவர்கள் தான். இதனால் அவர்களுக்குப் போட்டியாக விநாயகர் சதுர்த்தியின்போது திராவிட விநாயகரை வைத்து நாங்கள் வழிபட விரும்புகிறோம். அதற்கும் உங்கள் அனுமதி தேவை' என்ற ரீதியில் பேசிய ஒரு வீடியோ வெளியாகி வைரலானது.
திராவிட சித்தாந்தம் என்ற கொள்கையே கிறிஸ்துவ மிஷனரிகள் உருவாக்கியது தான். இந்து மதத்தை அழிக்கவேண்டும் என்று உருவாக்கப்பட்ட இந்த சித்தாந்ததில்தான் தி.மு.க. தனது அரசியல் பயணத்தை நடத்தி வருகிறது. அப்படி இருக்கும்போது எங்கிருந்து வந்தது திராவிட விநாயகர்?
50 ஆண்டுகளுக்கும் மேலாக விநாயகரை வந்தேறி கடவுள் என்று சொல்லிவிட்டு இப்போது விநாயகர்சதுர்த்தி கொண்டாடவேண்டும் என்று தி.மு.க. அந்தர் பல்டி அடிக்க என்ன காரணம்? ஒவ்வொரு விநாயகர் சதுர்த்தியின் போதும் விநாயகர் உருவ சிலையை உடைத்து திராவிட இயக்கத்தினருக்கு வழக்கமான விஷயமாயிற்றே இப்போது எங்கிருந்து வந்தது திடீர் பாசம்? என்று இந்து மத ஆர்வலர்கள் தி.மு.க. வை வறுத்தெடுத்து வருகின்றனர். இதுபற்றி விரிவாக தெரிந்துகொள்ள இந்து முன்னணியின் சென்னை மாநகர தலைவர் இளங்கோவனிடம் 'மிஷன் காளி' இயக்கம் சார்பாக பேசினர். அவர் நமக்கு மிஷனரிகளோடு தி.மு.க. நடத்திய அரசியலை விளக்கினார்.
இளங்கோவன் அவர்கள் கூறும்போது 'விநாயகர் சதுர்த்தி மட்டுமல்ல. வேறு எந்த ஒரு இந்து கடவுளைப் பற்றியும் பேசுவதற்கு தி.மு.க விற்கு அருகதை கிடையாது. காரணம் தி.மு.க. வின் வரலாறு இந்துமத எதிர்ப்பினால் கட்டமைக்கப்பட்டது. அந்த காலத்தில் இந்தியாவைக் கைப்பற்றிய ஆங்கிலேயர்கள் இரண்டு விஷயத்தில் குறியாக இருந்தனர். ஒன்று இந்துக்களை மதம் மாற்ற வேண்டும். மற்றொன்று இந்துக்கள் ஒற்றுமையாகி விடக்கூடாது.
இந்த இரண்டு குறிக்கோளை நிறைவேற்றிக்கொள்ள கிறிஸ்தவ மிஷனரிகளால் உருவாக்கப்பட்டது தான் ஆரிய திராவிட இனப் பிரிவினை வாதம். இந்த போலி ஆரிய-திராவிட பிரிவினையை பயன்படுத்தி தமிழகத்தில் பெருமளவு மதம் மாற்றப் பணிகளில் ஈடுபட்டவன் ராபர்ட் கால்டுவெல் என்ற கிறிஸ்துவ மிஷினரி. ஆக கிறிஸ்தவ மிஷனரிகளால் உருவாக்கப்பட்ட திராவிட சித்தாந்தத்தையும், ராபர்ட் கால்டுவெல் போன்ற மிஷனரிகளையும் பின்பற்றித்தான் தி.மு.க. இத்தனை ஆண்டு கால அரசியல் நடத்தி வருகிறது.