அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜைக்கு அத்வானி, மோடி வருகையா? வயிற்றில் அடித்துக்கொள்ளும் இடதுசாரிகள்!

அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜைக்கு அத்வானி, மோடி வருகையா? வயிற்றில் அடித்துக்கொள்ளும் இடதுசாரிகள்!

Update: 2020-07-22 13:30 GMT

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான முதல் படியாக பூமி பூஜை வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொடங்கும். இந்த விழாவிற்கு முன்னாள் துணை பிரதமர் அத்வானி, பிரதமர் மோடி, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோருடன் பல அழைப்பாளர்களுடன் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தல் 200 பேர் கலந்துக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராமர் கோயில் அறக்கட்டளையின் அறங்காவலராக பணியாற்றும் காமேஷ்வர் பால் ஆகஸ்ட் 5-ஆம் தேதி கோயில் நகரத்திற்கு பிரதமர் வருவார் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று தெரிவித்தார். கொரோனா வைரஸுக்கு எதிரான பாதுகாப்பு தொடர்பாக அனைத்து அரசு நிலையான இயக்க நடைமுறைகளும் (எஸ்ஓபிக்கள்) உறுதி செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

அனைத்து கட்டாய நெறிமுறைகளும் பின்பற்றப்படும் என்று கோயில் அதிகாரிகள் உறுதியளித்த போதிலும், "கொரோனா தொற்று காலத்தின் போது பிரதமர் ஏன் இத்தகைய நிகழ்வுக்குச் செல்கிறார்?" என்று எதிர்க்கட்சியினர் புறம் பேச ஆரம்பித்துவிட்டனர்.

இடதுசாரி இணைய ஊடகமான தி வயர், "அயோத்தி ராமர் கோயிலுக்கு பூமி பூஜைக்கு ஆகஸ்ட் 5-ஐ தேர்ந்தெடுப்பதற்கான அரசியல் காரணங்கள் என்ற தலைப்பில் ஒரு கட்டுரையும் வெளியிட்டுள்ளது.

அதில் "ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அரசியலமைப்பு அந்தஸ்தை ரத்து செய்த முதல் ஆண்டு நிறைவை இந்த தேதி குறிக்கிறது. இந்த இரண்டு நிகழ்வுகளையும் இந்த பாணியில் இணைப்பதன் மூலம், ஒரு அரசியல் செய்தி அனுப்பப்படுவது தெளிவாகிறது, "என்று ஷரத் பிரதான் தனது கட்டுரையில் எழுதினார்.

ராம் ஜென்மபூமி இயக்கத்தின் அரசியல் முகமாக மாறிய பா.ஜ.க மூத்த தலைவரான லால் கிருஷ்ணா அத்வானி பிரதமர் மோடியுடன் அயோத்தியில் பூமி பூஜையில் கலந்துக்கொள்வார் என மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செய்தி இடதுசாரிகளுக்கு மேலும் நெஞ்செரிச்சலை அதிகப்படுத்தி உள்ளது.

Similar News