"பழைய ஆட்களை தூக்கி போடுங்க, புது ஆட்களை உள்ள போடுங்க" என உத்தரவு பிறபித்த பிரசாந்த் கிஷோர், அறிவாலயம் அனுப்பிய சர்குலர். உச்சகட்ட கடுப்பில் உபி'க்கள்

"பழைய ஆட்களை தூக்கி போடுங்க, புது ஆட்களை உள்ள போடுங்க" என உத்தரவு பிறபித்த பிரசாந்த் கிஷோர், அறிவாலயம் அனுப்பிய சர்குலர். உச்சகட்ட கடுப்பில் உபி'க்கள்

Update: 2020-07-11 10:03 GMT

திமுகவில் வார்டு, கிராம, ஊராட்சி அளவில் பிரபலமாக இருக்க கூடியவர்களை அடையாளம் கண்டு அனுப்புமாறு அக்கட்சி தலைமை அனுப்பியுள்ள சுற்றறிக்கை சீனியர் நிர்வாகிகளை கதிகலங்க வைத்துள்ளது.

சட்டமன்ற தேர்தலுக்கு பிரசாந்த் கிஷோரின் வழிகாட்டல் படி தயாராகி வரும் திமுக, கலைந்து போன வாக்கு வங்கியை தக்க வைக்கவும், புதிய வாக்காளர்களை ஈர்க்கவும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. பழையபடி மாவட்டச் செயலாளர்களுடன் கட்சி செயல்பாடுகள் குறித்து விவாதிப்பதை கடந்த சில மாதங்களாக திமுக தலைமை பிரசாந்த் கிஷோரின் வழிகாட்டுதல் படி மாற்றிக் கொண்டுள்ளது. வார்டு, கிராம அளவில் உள்ள திமுக நிர்வாகிகளுடன் கூட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதற்காக அனைத்து நிர்வாகிகளின் செல்போன் எண் உள்ளிட்ட விவரங்கள் ஏற்கனவே சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திடீரென திமுக தலைமையிடம் இருந்து மாவட்டச் செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள சுற்றறிக்கை வெளியாகியுள்ளது. அதிலும் உள்ளூரில் பிரபலமாக இருக்கும் கட்சி உறுப்பினர்களின் விவரங்களை கட்சித் தலைமைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக குறைந்தது 20 பேரிடமாவது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நபராக அந்த பிரபலமான திமுக பிரமுகர் இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

இந்த புதிய திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் அவ்வப்போது கலந்துரையாடுவார் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சொந்த கட்சியிலேயே பிரபலமானவர்களை தேடிக் கொண்டிருக்கிறது திமுக. அப்படி என்றால் திமுகவில் தற்போது பொறுப்புகளில் இருப்பவர்கள் பிரபலமானவர்கள் இல்லையா? கட்சியில் வார்டு செயலாளர் முதல் தலைமை நிலைய செயலாளர் வரை பொறுப்புகள் எதற்கு என்று கேள்விகள் மற்றும் குழப்பங்கள் எழுந்துள்ளன.

"கட்சியின் செயல்பாடு, வளர்ச்சி நிலவரம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கத்தானே பொறுப்பாளர்கள் நாங்க இருக்கோம் அப்படி என்ன புது ஆட்கள் வந்து பெருசா சாதிக்க போறாங்க?" என்ற புகைச்சலும் எழுந்துள்ளது. ஒருவேளை பொறுப்பாளர்களை ஓரங்கட்டப்போகிறார்களா? என்று திமுக நிர்வாகிகள் கலக்கத்தில் உள்ளனர். கட்சியின் ஒன்றியச் செயலாளராக நான் இருக்கும்போது என் ஒன்றியத்தில் இருந்து தலைவர் ஒருவருடன் நேரடியாக பேசினால் எனக்கு என்ன மரியாதை என்று இப்போதே திமுகவில் சில நிர்வாகிகள் கவலை அடைய ஆரம்பித்துள்ளனர்.

இதையெல்லாம் விட "வாரிசுகள் செட்டில் ஆகதான் 10 வருஷமா ஆட்சிலேயை இல்லாம நாங்க செலவு பண்ணிட்ருக்கோம், அதைமீறி

இப்படி பிரபலமானவர்களை நாங்களே அடையாளம் காட்டினால் எங்கள் வாரிசுகளின் நிலை என்ன?" என்றெல்லாம் கடுப்பான கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளனர்.

இதனிடையே, இந்த வேலைகள் அனைத்தும் ஐபேக் நிறுவனத்தின் ஆலோசகர் பிரசாத் கிஷோரின் சொல்படியே நடைபெறுவதாக கூறப்படுகிறது. மேலும், சில நிர்வாகிகள் ஐபேக் நிறுவனம் வகுத்துள்ள இந்த மாஸ்டர் திட்டத்துக்குக் கட்சியினர் எந்த அளவுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள் என்கிற கேள்வியும் இப்போதே எழுந்துள்ளது. ஏற்கனவே 'ஒன்றிணைவோம் வா' என்ற தோல்வியடைந்த திட்டம் மூலம் அரசாங்கம், மக்கள், தொண்டர்கள் என எந்த பக்கமும் நல்ல பெயர் இல்லை இதில் இது வேறயா? பிரசாந்த் கிஷோர் திட்டங்கள் பலிக்கவில்லை என்றாலும் திமுக தலைமை குடும்பத்திற்கு 7 தலைமுறைக்கு சொத்து உள்ளது பிழைத்துகொள்ளும், ஆனால் நமக்கு திமுக கரைவேட்டி மட்டும்தான் உள்ளது! அதை தலைல போட்டு போக வேண்டியதுதான்" என வெளிப்படையாகவே பேசுகிறார்கள் உடன்பிறப்புகள்.

Similar News