"பழைய ஆட்களை தூக்கி போடுங்க, புது ஆட்களை உள்ள போடுங்க" என உத்தரவு பிறபித்த பிரசாந்த் கிஷோர், அறிவாலயம் அனுப்பிய சர்குலர். உச்சகட்ட கடுப்பில் உபி'க்கள்
"பழைய ஆட்களை தூக்கி போடுங்க, புது ஆட்களை உள்ள போடுங்க" என உத்தரவு பிறபித்த பிரசாந்த் கிஷோர், அறிவாலயம் அனுப்பிய சர்குலர். உச்சகட்ட கடுப்பில் உபி'க்கள்
திமுகவில் வார்டு, கிராம, ஊராட்சி அளவில் பிரபலமாக இருக்க கூடியவர்களை அடையாளம் கண்டு அனுப்புமாறு அக்கட்சி தலைமை அனுப்பியுள்ள சுற்றறிக்கை சீனியர் நிர்வாகிகளை கதிகலங்க வைத்துள்ளது.
சட்டமன்ற தேர்தலுக்கு பிரசாந்த் கிஷோரின் வழிகாட்டல் படி தயாராகி வரும் திமுக, கலைந்து போன வாக்கு வங்கியை தக்க வைக்கவும், புதிய வாக்காளர்களை ஈர்க்கவும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. பழையபடி மாவட்டச் செயலாளர்களுடன் கட்சி செயல்பாடுகள் குறித்து விவாதிப்பதை கடந்த சில மாதங்களாக திமுக தலைமை பிரசாந்த் கிஷோரின் வழிகாட்டுதல் படி மாற்றிக் கொண்டுள்ளது. வார்டு, கிராம அளவில் உள்ள திமுக நிர்வாகிகளுடன் கூட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதற்காக அனைத்து நிர்வாகிகளின் செல்போன் எண் உள்ளிட்ட விவரங்கள் ஏற்கனவே சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திடீரென திமுக தலைமையிடம் இருந்து மாவட்டச் செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள சுற்றறிக்கை வெளியாகியுள்ளது. அதிலும் உள்ளூரில் பிரபலமாக இருக்கும் கட்சி உறுப்பினர்களின் விவரங்களை கட்சித் தலைமைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக குறைந்தது 20 பேரிடமாவது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நபராக அந்த பிரபலமான திமுக பிரமுகர் இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
இந்த புதிய திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் அவ்வப்போது கலந்துரையாடுவார் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சொந்த கட்சியிலேயே பிரபலமானவர்களை தேடிக் கொண்டிருக்கிறது திமுக. அப்படி என்றால் திமுகவில் தற்போது பொறுப்புகளில் இருப்பவர்கள் பிரபலமானவர்கள் இல்லையா? கட்சியில் வார்டு செயலாளர் முதல் தலைமை நிலைய செயலாளர் வரை பொறுப்புகள் எதற்கு என்று கேள்விகள் மற்றும் குழப்பங்கள் எழுந்துள்ளன.