தமிழ்நாட்டில் உள்ள விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள அரசு அனுமதி.!

தமிழ்நாட்டில் உள்ள விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள அரசு அனுமதி.!

Update: 2020-07-25 06:16 GMT

தமிழ்நாட்டில் உள்ள விளையாட்டு வீரர்கள் பயிற்சியை மேற்கொள்வதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச மற்றும் தேசிய போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் பயிற்சியில் ஈடுபடலாம் என தெரிவித்துள்ளது.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியது: உடற்பயிற்சிக் கூடத்தை திறக்கவும் மற்றும் நீச்சல் பயிற்சிக்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரர்கள் பயிற்சியை துவங்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.


இதில் 15 வயதுக்குள் இருப்பவர்கள் முதல் 50 வயது மேல் உள்ளவர்களுக்கு பயிற்சியில் ஈடுபட அனுமதி கிடையாது என தெரிவித்துள்ளது.

மேலும், விளையாட்டு வீரர்களும் மற்றும் பயிற்சியாளர்களும் கட்டாயமாக ஆரோக்கிய சேது செயலியை உபயோகப்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. விளையாட்டு வீரர்களில் யாருக்காவது கொரானா வைரஸ் இருப்பது உறுதியானால் சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டுபிடித்துத் தனிமைப்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Similar News