சச்சின் பைலட் ஓரங்கட்டிவிட்டு அவரது ஆதரவாளர்களுக்கு 'கொக்கி போடும்' ராஜஸ்தான் முதல்வர்....!
சச்சின் பைலட் ஓரங்கட்டிவிட்டு அவரது ஆதரவாளர்களுக்கு 'கொக்கி போடும்' ராஜஸ்தான் முதல்வர்....!
ராஜஸ்தானுக்கு போதாத காலமாக இருக்கிறது. தற்போதைய ஆட்சி நிலைக்குமா கவிழுமா என்றே தெரியாமல் மக்களும் என்ன செய்வதென்று அறியாமல் திகைத்து வருகின்றனர்.மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி வீழ்வதற்கு முக்கிய காரணமாக இருந்த ஜோதிராதித்யா சிந்தியாவின் சூழ்ச்சியை போல ராஜஸ்தானின் நடக்குமா நடக்காதா என்று ஆட்சியாளர்கள் கலக்கமடைந்துள்ளனர். எனவே அசோக் ஆட்சியில் தொடர்ந்து நீடிப்பாரா இல்லையா என்பது உத்தேசமாக சொல்லிவிட முடியாது ஆகையால் இந்த ஆட்சி ஒரு வாழ்வா சாவா போராட்டமாக மாறிக்கொண்டிருக்கிறது.
கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட சச்சின் பைலட் துணை முதல்வராக தனது கடமைகளை நிறைவேற்ற கட்சியில் பாகுபாடு காட்டி மக்களுக்கு எந்த ஒரு சேவைகளையும் வழங்க அனுமதிக்கவில்லை. ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் சச்சின் பைலட், ஆனால் கட்சியின் மூத்த தலைவரான அசோக்கை முதல்வராக்கி, பின்னர் சம்பிரதாயத்துக்கு துணைமுதல்வர் பதவியை சச்சின் பலருக்கு வழங்கினார். ஆனால் கட்சியில் உள்ள வேறுபாடு காரணமாக எந்த ஒரு செயலையும் திட்டங்களின் மக்களிடையே கொண்டு செல்ல சச்சின் பைலட் அனுமதிக்க கட்சி வட்டாரங்கள் மறுத்துள்ளதாக சச்சின் மேல் குற்றம் சாட்டியுள்ளார்.
2019 தேர்தல் தோல்விக்குப் பின்னர் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகியதால், சிந்தியா, பைலட் போன்ற தலைவர்கள் காங்கிரசின் பழைய ஆளுமைக்கு திரும்பி வந்தார்கள் என்பது தெளிவாகத் தெரிந்தது, அங்கு 'மூத்த' தலைமுறை தான் வரிசையாக ஆட்சி செய்து வருகிறது.இதனால் அவர்கள் குடும்ப வாரிசு அரசியல் தொடக்கத்தில் பல இளம் தலைவர்களை ஓரங்கட்டி கட்சியிலிருந்து வெளியேற வேண்டும் என்ற எண்ணத்துடன் மூத்த தலைவர்கள் செயல்பட்டனர்.