பாபர் மசூதி இடிப்பிற்குப் பின் ராம் லாலாவை தற்காலிகக் கோவிலில் வைத்த கதை.!
பாபர் மசூதி இடிப்பிற்குப் பின் ராம் லாலாவை தற்காலிகக் கோவிலில் வைத்த கதை.!
ராமர் கோவிலின் பூமி பூஜை நெருங்கி வரும் நிலையில், பாபர் மசூதி இடிப்பது குறித்துப் பல நினைவுகள் சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றன. அதில் ஒன்றாக 1992 இல் ராம் லாலா கோவில் இடிக்கப்பட்டது, அதன் பின்னர் தற்காலிகமாக கோவில் எழுப்பப்பட்ட போது கலந்து கொண்ட கரசேவகர்களில் ஒருவர் பாபா சத்தியநாராயணன் மௌர்யா. சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில், ஆயுதப் படைகள் தங்களைச் கைது செய்ய வந்தபோது எவ்வாறு சிறிது நேரத்தில் சிந்தித்து ராம் லாலாவுக்கு கோயில் காட்டினர் என்பதைச் சிறுகதையாகக் கூறினார்.
I broke into tears😭
— Voyager🏝️ (@voyagerstrail) August 1, 2020
🙏🚩🚩pic.twitter.com/C5uUMJ7G6q
பாபா என்று அழைக்கப்படும் பாபா சத்தியநாராயணன் மௌர்யா கூறுகையில்," டிசம்பர் 7 இடிந்த இடத்திற்கு காவல்துறையினர் வருகின்றனர் என்று அறிந்த பின்பு எங்களுக்கு வேறு வழியில்லை. நாங்கள் சிறிது நேரத்தில் கோவிலைக் கட்டியாகவேண்டும். அவ்வாறு செய்யாதிருந்தால் தற்போது வரை அது சர்ச்சைக்குரிய நிலமாகவே இருந்திருக்கும், ராமர் கோவில் என்று அறியப்பட்டு இருக்காது. கடவுள் ராமர் அதற்கு வழிகாட்டினார், நாங்கள் கொண்டுவந்த துணிகளைக் கொண்டு சிறிய கோவில் ஒன்றை அமைத்தோம்." ராமர் கோவிலின் கட்டுமான பணிக்குத் தள்ளி வைக்கப்பட்ட தற்காலிக கோவில் ராம் லாலா கட்டமைப்பினை போன்றே இருந்தது
மசூதியை இடிப்பதற்கு முன்பு, ராம் லாலாவின் சிலை மசூதியின் மையப்பகுதி வைக்கப்பட்டது. இது 1949 டிசம்பர் இரவில் சில புனிதர்களால் வைக்கப்பட்டது, பின்னர் மத வன்முறையைத் தடுக்க அரசாங்கத்தால் மசூதி பூட்டப்பட்டது. இதற்கு முன்னர் பிரிட்டிஷ் அரசாங்கம் 1859இல் அந்நிலத்தை இரண்டாகப் பிரித்த நிலையில் முஸ்லீம் மற்றும் இந்துக்கள் அந்த இடத்தில் வழிபாடு செய்து வந்தனர். மசூதி மற்றும் உள்மன்றம் முஸ்லிம்களுக்கும், மன்றத்தின் வெளிப்பகுதி இந்துக்களுக்கும் பிரித்தளிக்கப்பட்டது. 1992 இல் மசூதி இடிக்கப்பட்ட பின்னர், சிலையை அமைக்கத் தற்காலிக கூடாரமாக இக்கோவில் எழுப்பப்பட்டது.