அடங்காத பாகிஸ்தான் பயங்கரவாதிகள், நேற்று காஷ்மீரில் நடந்த தாக்குதலில் மூன்று இந்திய வீரர்கள் உயிர் இழப்பு.!
அடங்காத பாகிஸ்தான் பயங்கரவாதிகள், நேற்று காஷ்மீரில் நடந்த தாக்குதலில் மூன்று இந்திய வீரர்கள் உயிர் இழப்பு.!
வடக்கு காஷ்மீரில் உள்ள சோபோரில் சனிக்கிழமை (ஏப்ரல் 18) மத்திய படை குழு மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் மூன்று சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகரிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சோபூரில் உள்ள அஹத் சஹாப் பைபாஸில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மூன்று சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர் என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
இப்பகுதி சுற்றி வளைக்கப்பட்டு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஷோபியன் மற்றும் கிஷ்த்வாரில் நடந்த இரண்டு தனித்தனி நடவடிக்கைகளில் வெள்ளிக்கிழமை நான்கு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.