இரண்டு தலைமை காவலர்களுக்கு கொரோனா உறுதி - அச்சத்தில் காவல்த்துறை!
இரண்டு தலைமை காவலர்களுக்கு கொரோனா உறுதி - அச்சத்தில் காவல்த்துறை!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் மகாராஷ்டிரா, டெல்லி மற்றும் தமிழ்நாட்டில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு விதித்து அமலில் உள்ளது.
இதனிடையே டெல்லியில் இரண்டு தலைமை காவல் துறையினருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகி உள்ளது. மேலும் இவர்களுடன் வேலை பார்த்த 26 காவல்துறையினர் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இந்தியாவில் 13,000-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 437 உயிரிழந்துள்ளனர்.
Source: Daily Thanthi