ஒரே குடும்பத்தை சேர்ந்த 23 பேருக்கு கொரோனா வைரஸ்.!

ஒரே குடும்பத்தை சேர்ந்த 23 பேருக்கு கொரோனா வைரஸ்.!

Update: 2020-04-11 05:36 GMT

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதனால் பீகாரில் மாநிலத்தில் 60க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் இடையே பீகாரில்  உள்ள சிவான் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் ஒமனிலிருந்து சென்ற மாதம் 16ஆம் தேதி இந்தியாவிற்கு திரும்பினார். இதற்கு பின்னர் அவர் சிவான் மாவட்டத்தில் பல இடங்களுக்கு சுற்றியுள்ளார். மேலும் இவர் சளி, இரும்பல் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இந்த 4ஆம் தேதி தான் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது.

இதன் பின்னர் அவருடைய குடும்பத்தில் இருப்பவர்களை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். இதில் குழந்தைகள் உள்பட 22 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


மேலும் இவர்கள் இருக்கும் கிராமத்தில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதனால் அந்த மாவட்டத்தில் இருக்கும் 43 கிராமங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2518983

Similar News