"நமக்கு நாமே" திட்டத்திற்கு உதவிய தி.மு.க நிர்வாகி'க்கே விபூதி அடித்த உடன்பிறப்புகள் - தொழிலை இழந்து நிற்கதியாக நிற்கும் அவலம் #DMK #KarurDMK
"நமக்கு நாமே" திட்டத்திற்கு உதவிய தி.மு.க நிர்வாகி'க்கே விபூதி அடித்த உடன்பிறப்புகள் - தொழிலை இழந்து நிற்கதியாக நிற்கும் அவலம் #DMK #KarurDMK
தி.மு.க என்றாலே அராஜகம் என்று அகராதியில் பதிந்து வைக்கும் அளவிற்க்கு போய்விட்டது. செய்திகளில் இது வருவது குறைவென்றாலும் சமீக வலைதளங்களில் பாதிக்கப்பட்டோர் இது போன்ற சம்பவங்களை உடனுக்குடன் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் "தண்டபாணி சங்கர்"எனபவர் தனது முகநூல் பதிவில் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் கொசூரை சேர்ந்த தங்கவேல் என்பருக்கு தி.மு.க இழைத்த துரோகத்தை பதிவிட்டுள்ளார்.
அந்த விவரம் பின்வருமாறு, "கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் கொசூர் சேர்ந்தவர் தங்கவேல், இவருக்கு நான்கு பெண் குழந்தைகள் உள்ளனர். இவரது மனைவி நிறைமாத கர்ப்பிணி.
தமிழக அரசின் குளம், குட்டை , ஏரிகள் மற்றும் கால்வாய்களை தூர் வாரி விவசாயிகளுக்கு தடையில்லாமல் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய குடிமராமத்து திட்டத்தினை தமிழக முதல்வர் எடப்பாடியார் தொடங்கிய போது திமுகவின் ஸ்டாலின் "நமக்கு நாமே" என்ற பெயரில் திமுகவினர் ஏரி குளங்களை தூர் வாருவார்கள் என்று அறிவித்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்
நிற்க..
அடிபட்டு தற்போது மருத்துவமனையில் உள்ள தங்கவேலு அப்போது JCB சொந்தமாக வைத்து தொழில் செய்து வருகிறார்.. அப்போது அவர் திமுகவில் நிர்வாகியாக இருந்தார். அவரை அனுகிய திமுக நிர்வாகிகள் கொசூர் அருகில் உள்ள நாதிப்பட்டி குளத்தை தூர் வார வேண்டும். ஸ்டாலின் வருவதாகவும் இரண்டே நாட்களில் தூர் வார வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்
அதற்கு ஒப்புக்கொண்ட தங்கவேல் தனது வண்டியுடன் மேலும் இரண்டு ஜேசிபி மற்றும் டிராக்டர் டிப்பர் லாரிகளை நண்பர்களிடமிருந்து வாடகைக்கு பெற்று இரண்டே நாட்களில் அந்த குளத்தை தூர்வாரி கொடுத்தார்
17/05/2017 அன்று திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு அந்தக் குளத்தை தூர்வாரியதாக சீன் போட்டு பத்திரிகையாளர்களை அழைத்து அரசியல் செய்துவிட்டு சென்றுவிட்டார் அதன் பிறகு குளத்தை தூர்வாரியதற்கான பில்
தொகையான ரூபாய் 150000 கேட்டு சம்பந்தப்பட்ட நிர்வாகியான கொசூர் திமுக ஆட்சி செயலாளரரும், கரூர் மாவட்ட திமுக இளைஞரணி முன்னாள் துணை அமைப்பாளர் மகாலிங்கம் அவர்களை கேட்டுள்ளார் தங்கவேல் கரூர் மாவட்ட தற்போதைய திமுக அமைப்பாளர் திரு செந்தில் பாலாஜியிடம் வாங்கி தருவதாக கூறிய மகாலிங்கம் சுமார் ஒரு வருட காலம் இவ்வாறு இழுத்த மகாலிங்கம் அதன்பிறகு வருங்கால முதல்வரே உன் வண்டியில் ஏறி உள்ளார் பணம் ஆட்சிக்கு வந்து தருகிறோம்' என கூறி உள்ளார்