டெல்லி இஸ்லாமிய மாநாட்டிற்கு சென்று வந்தவர்களுக்கு தமிழக மூத்த மருத்துவர் Dr.ஃபரூக் அப்துல்லா உருக்கமான வேண்டுகோள்!
டெல்லி இஸ்லாமிய மாநாட்டிற்கு சென்று வந்தவர்களுக்கு தமிழக மூத்த மருத்துவர் Dr.ஃபரூக் அப்துல்லா உருக்கமான வேண்டுகோள்!
டெல்லி இஸ்லாமிய தப்ளிகி ஜமாத் மாநாட்டுக்கு சென்று திரும்பியவர்கள் சிலர் கொரோனா சோதனைக்கு இன்னும் தங்களை உட்படுத்திக் கொள்ளாமல் இருக்கிறார்கள், அவர்கள் தங்கள் குடும்பத்தார் நலனுக்காகவும், அக்கம் பக்கத்தார் நலனுக்காகவும், எந்த சமய சாயங்களையும் பூசிக் கொள்ளாமல் அரசுக்கு ஒத்துழைப்பு அளித்து சோதனைகள் செய்ய முன்வரவேண்டும் என சிவகங்கை மாவட்ட பொது நல மருத்துவ அதிகாரி Dr.ஃபரூக் அப்துல்லா உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் சோதனைகளில் கடைபிடிக்கப்படும் மருத்துவ முறைகளையும் வெளிப்படையாக இந்த வேண்டுகோளில் தெரிவித்துள்ளார்.
பின்வருமாறு அவர் கூறியுள்ளார்:
புதுடில்லி நிஜாமுதீன் மர்கஸில் கடந்த மார்ச் 23 வரை பல மாநிலங்களில் இருந்தும் அந்த மார்க்க கூட்டத்தில் கலந்துக் கொண்டிருந்தனர். மேலும் அந்த கூட்டத்தில் வெளிநாடுகளில் இருந்தும் பலர் கலந்து கொண்டதை அறிவோம்.
இதனால் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்கள் பலருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படவே அதே கூட்டத்தில் பங்கு பெற்ற பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த மக்கள் குறித்த தகவல் பெறப்பட்டது. இதற்குப் பெயர் "CASE TRACING FROM A COMMON SOURCE" என்று பெயர்.
அதாவது ஒரு பொது இடத்தில் சில நாட்கள் குழுவாக தங்கியிருந்தவர்களுள் சிலருக்கு நோய் தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டால், அதே இடத்தில் பங்கு பெற்ற மற்றவர்களையும் சோதிக்கும் முறை தான் CASE TRACING ஆகும்.
மேலும் அந்த கூட்டத்தில் பங்கு பெற்று திரும்பிய தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஆறு நபர்கள் மரணமடைந்த செய்தி வந்தடைந்துள்ளது.
தமிழகத்தில் இருந்து சமய பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்ற மக்கள் குறித்து அறிந்து அவர்களது முகவரிகளை கண்டு அவர்களை மருத்துவமனைகளுக்கு அழைத்துச்சென்று தனிமைப்படுத்தி பரிசோதனை செய்யப்படுகிறது