கடற்கரை- வேளச்சேரி இடையே 8 ம் தேதி காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார ரயில்கள் ரத்து!!

கடற்கரை- வேளச்சேரி இடையே 8 ம் தேதி காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார ரயில்கள் ரத்து!!

Update: 2019-09-06 12:58 GMT

சென்னை கடற்கரையில் இருந்து 8ம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) காலை எட்டு மணி முதல் 1.40 மணி வரை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதே சமயம் சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு பிற்பகல் 2 மணி முதல் மீண்டும் ரயில்கள் இயக்கப்படும். 
அதைப் போன்று வேளச்சேரியில் இருந்து காலை 8.10 முதல்  1.50 மணி வரை சென்னை கடற்கரை வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. வேளச்சேரி-சென்னை கடற்கரை இடையே பிற்பகல் 2.10 மணி முதல் மீண்டும் ரயில்கள் இயக்கப்படும். 
மேலும் சென்னை கடற்கரை-தாம்பரம், செங்கல்பட்டு இடையே வரும் 8ம் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.


ஆனால். பராமரிப்பு பணிகள் நடைபெறாத காரணத்தால் மின்சார ரயில்கள் வழக்கம் போல் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி ரயில்கள்  இயக்கப்படும். இவ்வாறு தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 


Similar News