அனைத்து ஆவணங்களையும் ஒப்படைத்தார் - பொன் மாணிக்கவேல்!

அனைத்து ஆவணங்களையும் ஒப்படைத்தார் - பொன் மாணிக்கவேல்!

Update: 2019-12-16 06:18 GMT

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஐஜியாக இருந்த பொன். மாணிக்கவேல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஓய்வு பெற்றார். இதனையடுத்து சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பொன்மாணிக்கவேலின் பதவிக்காலம் டிசம்பர் 30-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. 



சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக இருந்த பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்பு முடிவடைந்ததை தொடர்ந்து, அனைத்து ஆவணங்களையும் தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது பொன்மாணிக்கவேல் விசாரணை செய்து வந்த சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி அபை குமார் சிங்கிடம் முறையாக  ஒப்படைத்துள்ளார்.


Similar News