பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ.150 கோடி வழங்கிய - ஹெச்.டி.எப்.சி குழு..

பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ.150 கோடி வழங்கிய - ஹெச்.டி.எப்.சி குழு..

Update: 2020-04-02 11:44 GMT

சீனாவில் உள்ள வுஹான் மாகாணத்தில் இருந்து கொரோன வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதனால் இது வரை 9 லட்சத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 47ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது இந்தியாவிலும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரதமரின் நிவாரண நிதிக்கு தங்களால் முடிந்த நன்கொடை வழங்கலாம் என தெரிவித்து இருந்தார். மேலும் இதற்கு பல பிரபலங்கள், நடிகர்கள், பெரும் நிறுவனங்கள் உள்பட பலரும் பிரதமரின் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கினார்.

இதன் இடையே கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தும் விதமாக ஹெச்.டி.எப்.சி குழு சார்பில் பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூபாய்.150 கோடி நிதியுதவி வழங்க உள்ளது. 

Similar News