“டெல்லியில் இருந்துகொண்டே, தென் மாவட்டங்களை தீப்பிடிக்க வைப்பேன்” - வன்முறையை தூண்டும் திருமாவளவன்!!

“டெல்லியில் இருந்துகொண்டே, தென் மாவட்டங்களை தீப்பிடிக்க வைப்பேன்” - வன்முறையை தூண்டும் திருமாவளவன்!!

Update: 2019-07-19 12:54 GMT


டெல்லியில் இருந்துகொண்டே தென்மாவட்டங்களில் தீப்பிடிக்க வைக்க முடியுமென்றும், சட்டம் ஒழுங்கை சீர் குலைக்க முடியும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் வன்முறையை தூண்டி பேசியிருப்பது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


எம்.பி.யாக பதவி ஏற்றுள்ள திருமாவளவன் பொதுமேடையில் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில் பகிரங்கமாக வன்முறையைத் தூண்டும் விதத்தில் திருமாவளவன் பேசியுள்ளார்.




https://www.facebook.com/HINDUDESABAKTHAN/videos/vb.434554550304573/393850214575461/?type=2&theater



அந்த வீடியோவில் திருமாவளவன், “நான் டெல்லியில் இருந்துகொண்டே, தென் மாவட்டங்களை தீப்பிடிக்க வைக்க முடியும். சட்டம் ஒழுங்கை சீர் குலைக்க வைக்க முடியும். பேருந்துகள் ஓடாது, வண்டி வாகனங்கள் ஓடாது, விமானங்கள் ஓடாது, ரெயில்கள் ஓடாது.” என்று கூறியுள்ளார். இதன் மூலம் திருமாவளவன், வன்முறை விஷத்தை கக்கி உள்ளார்.


திருமாவளவனின் இந்த வன்முறைப் பேச்சு, மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒரு வன்முறைக்கட்சி என்றும், கட்டப் பஞ்சாயத்து கட்சி என்றும் பல நடுநிலையாளர்கள் கூறியது உண்மைதான் என்பதை திருமாவளவனின் சமீபத்திய பேச்சு நிரூபித்து உள்ளது.


Similar News