இப்படியெல்லாம் நடக்குமா..? ஒருவேளை நடந்துவிட்டால்……!! பூமி தன் சுழற்சியை நிறுத்தி கொண்டால்...?

இப்படியெல்லாம் நடக்குமா..? ஒருவேளை நடந்துவிட்டால்……!! பூமி தன் சுழற்சியை நிறுத்தி கொண்டால்...?

Update: 2019-12-18 02:34 GMT

"ஏங்க
இப்படியெல்லாம் நடக்குமாங்க...?" என்று
நாம் யோசித்து முடிக்கும் நொடிக்குள் எதுவும் நிகழும் சாத்தியம் நிறைந்த சூழலில்
தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இப்படி நடந்து விட்டால் என்ன தான் நிகழ்ந்து
விடும் என்கிற அறிவியல் பார்வையே இந்த கட்டுரை.


பெரும்பாலான
ஹாலிவுட் திரைப்படங்கள் உலகம் முடிவுக்கு வந்தால் என்ன நிகழும் என்பன போன்ற
கருத்துருவாக்கத்தில் பல திரைப்படங்களை எடுத்து வருகிறது. இருந்தாலும் பூமி தன்
சுழற்சியை நிறுத்தினால் அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்கிற  கேள்வியும் அதற்கான பதிலும் நம்ம வியப்பில்
ஆள்த்துகிறது..



  1. அனைத்து பொருள்களும்(மனிதர்கள் உட்பட) கிழக்கை நோக்கி வெகு வேகமாக பறந்து கொண்டிருக்கும்
  2. பெரும் ராட்சஷ அலைகள் பொங்கியெழும்
  3. மிக வலிமையான பெருங்காற்று வீசும்
  4. பூமியில் இருக்கும் அனைத்து கடல் நீரும் ஏதேனும் இரண்டு கடல்களில் மொத்தமாக வந்து சேரும் இதனால் ஒரு தனி கண்டம் உருவாகும்
  5. எரிமலை, பூகம்பம் அனைத்தும் எழத்துவங்கும்
  6. பூமி இப்போதிருக்கும் வடிவிலிருந்து வட்ட வடிவை பெறும்
  7. ஒரு துருவம் பாலைவனத்தை காட்டிலும் சூடாகவும், மறுதுருவம் அண்டார்டிக்காவை காட்டிலும் குளிராகவும் இருக்கும்
  8. நிலா கீழிறங்கி பூமியில் விழக்கூடும்.. ஆனால் இவையெல்லாம் அத்தனை எளிதானதோ அல்லது விரைவானதோ அல்ல.

Similar News