நரி குறவர்கள் பசியுடன் கிடப்பதாக டிவிட்டரில் செய்தி: உடனடி நடவடிக்கை எடுத்தார் எடப்பாடி...

நரி குறவர்கள் பசியுடன் கிடப்பதாக டிவிட்டரில் செய்தி: உடனடி நடவடிக்கை எடுத்தார் எடப்பாடி...

Update: 2020-04-07 08:15 GMT

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள கிராம பஞ்சாயத்து இடும்பாவனம் ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட அடஞ்சவிளாகம் எனும் குக்கிராம பகுதியில் 40க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த குடும்பங்கள் ஊரடங்கு உத்தரவால் உணவுக்கு வழியின்றி சில நாட்களாக அல்லாடி வருவதாக நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஒருவர் சமூக வலைத்தளப் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து தகவலறிந்த முதல்வர் பழனிசாமி, நரிக்குறவர்களில் ஒருவரது கைபேசி எண்ணை பகிர்ந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என பதிலளித்தார். நாம் தமிழர் நிர்வாகி இரண்டு கைபேசி எண்களை தெரிவிக்க, அரசு சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பலரும் முதல்வரைப் பாராட்டி உள்ளனர்.

Source:  https://twitter.com/CMOTamilNadu/status/1246796228714803202?s=19

Similar News