மேற்கு வங்கத்தில் காளான்கள் போல பெருகும் பயங்கரவாதிகளை உருவாக்கும் மதரசாக்கள் ! மம்தா அரசுக்கு எச்சரிக்கை ! உள்துறை அமைச்சகம் அதிர்ச்சி தகவல்கள் !!
மேற்கு வங்கத்தில் காளான்கள் போல பெருகும் பயங்கரவாதிகளை உருவாக்கும் மதரசாக்கள் ! மம்தா அரசுக்கு எச்சரிக்கை ! உள்துறை அமைச்சகம் அதிர்ச்சி தகவல்கள் !!
பங்களாதேஷிலுள்ள ஜமாத் - உல் - முஜாஹிதீன் பங்களாதேஷ் (JMB) என்கிற இஸ்லாமிய பயங்கரவாத இயக்கம் மேற்கு வங்கத்தில் பர்த்வான் மற்றும் மூர்ஷிதாபாத் பகுதிகளில் உள்ள மதரஸா பாடசாலைகளை தங்கள் பயங்கரவாத நோக்கங்களுக்கு பயன்படுத்திக் கொள்வதை மத்திய உள்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
பங்களாதேஷிலுள்ள ஜமாத் - உல் - முஜாஹிதீன் பங்களாதேஷ் (JMB) என்கிற இஸ்லாமிய பயங்கரவாத இயக்கம் பாகிஸ்தானில் உள்ள லஸ்கர்-இ- தொய்பா பயங்கரவாத இயக்கத்துடன் இணைந்து பங்களாதேஷ் மற்றும் மேற்கு வங்க எல்லைபுற பகுதிகளில் பயங்கரவாதிகளை உருவாக்கும் முகாம்களை உருவாக்கியுள்ளதாகவும் உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளன.
மேற்கண்ட இடங்களை பயங்கரவாதிகள் தங்கள் பதுங்கும் இடங்களாக மட்டும் பயன்படுத்திக் கொள்ளவில்லை. இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் அடிக்கடி தாக்குதல் நடத்துவதற்கான புதிய பயங்கரவாதிகளை உருவாக்கவும் அவர்களை எல்லைபகுதிகளில் பணியமர்த்தவும் செய்கின்றன. இதற்கான நெட்வொர்க் பணிகள் மேற்கு வங்கத்தில் உள்ள மூர்ஷிடாபாத், மால்டா, நாடியா மாவட்ட பகுதிகள் மற்றும் முஸ்லிம் பெரும்பான்மையுள்ள அஸ்ஸாம் பகுதிகளிலும் நடந்து வருகின்றன. அந்த பகுதிகளில் உள்ள மசூதிகள் மற்றும் மதரசாக்கள் மூலமே மேற்கண்ட பயங்கரவாதிகள் இயக்கம் உதவிகளை பெறுகின்றன என்ற அதிர்ச்சிகரமான தகவல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
ஜமாத் - உல் - முஜாஹிதீன் பங்களாதேஷ் (JMB) இயக்கத்தை பயங்கரவாத இயக்கம் என சென்ற மே மாதம் 23 ஆம் தேதியே மத்திய அரசு அறிவித்தது. சென்ற 2014 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ந்தேதி பர்த்வான் மாவட்டத்தில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரனையின்போது கிடைத்த தகவல்களைக் கொண்டு மேற்கு வங்க மாநிலத்தில் பயங்கரவாதிகளை மற்றும் பயங்கரவாதத்தை உருவாக்கும் இயக்கங்கள் இருப்பதும் அவற்றுக்கு உள்ளூர் மக்களின் ஆதரவு இருப்பதும் என்பது தெரிய வந்துள்ளது.