“இந்து ஆலயங்களின் சொத்துக்களை பாதுகாத்தது தி.மு.கதான்” என்று பதிவிட்டு நெட்டிசன்களிடம் சிக்கி சின்னாபின்னமானார் உதயநிதி!
“இந்து ஆலயங்களின் சொத்துக்களை பாதுகாத்தது தி.மு.கதான்” என்று பதிவிட்டு நெட்டிசன்களிடம் சிக்கி சின்னாபின்னமானார் உதயநிதி!
இந்துக்களின் நம்பிக்கைகளையும், வழிபாட்டு முறைகளையும், இந்து தெய்வங்களையும் மிகக் கேவலமாக விமர்சித்து பேசி அரசியல் செய்து வருகிறது திமுக. சமீபகாலமாக திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் இந்து விரோத போக்கிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
ரம்ஜானுக்கும், கிறிஸ்மஸ்-க்கும் வாழ்த்து தெரிவிக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இந்துக்களின் தீபாவளி பண்டிகைக்கு மட்டும் வாழ்த்து சொல்வதில்லை. இதனால் அதிருப்தி அடைந்த இந்துக்கள் திமுகவுக்கு எதிராக திரும்பியுள்ளனர்.
தற்போது வெளியாகியுள்ள உள்ளாட்சி தேர்தல், திமுகவுக்கு பிரமாண்டமான வெற்றி என்று சொல்வதற்கு இல்லை. பாராளுமன்ற தேர்தல் முடிவை ஒப்பிட்டு பார்க்கின்ற பொழுது, திமுக மிகப்பெரிய சரிவை சந்தித்து உள்ளது. ஓட்டு சதவீதம் மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் இந்துக்களுடைய புறக்கணிப்பு தான்.
இதனை உணர்ந்துகொண்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், “திமுக இந்து விரோத கட்சி அல்ல” என்கின்ற வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது:-
இட ஒதுக்கீட்டின் மூலம் இந்துக்களுக்கான உரிமையை உறுதிசெய்வதும், அறநிலையத்துறை மூலம் ஆலயங்களுக்குக் குடமுழுக்கு நடத்தி அவற்றின் சொத்துக்களைப் பாதுகாத்ததும் தி.மு கழகமே. இன்றைய சூழலில் “இந்துக்களின் உண்மையான எதிரிகள் யார்?” என்பது விவாதிக்கப்பட வேண்டிய விஷயம்.