#9PM9Minute மின் விளக்குகளை அணைத்து அகல் விளக்குகள் ஏற்றிய கேரள முதல்வர் பினராயி விஜயன்..

#9PM9Minute மின் விளக்குகளை அணைத்து அகல் விளக்குகள் ஏற்றிய கேரள முதல்வர் பினராயி விஜயன்..

Update: 2020-04-06 03:01 GMT

பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் மின் விளக்குகளை அணைத்து அகல் விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்தியை ஏற்றி தங்கள் ஒற்றுமையை நிலைநாட்டினர். 

அரசியல் தலைவர்கள், திரை நட்சத்திரங்கள், ஆன்மீக குருமார்கள், குடிசை வாழ் மக்கள் என அனைத்து தரப்பு மக்களும் தீபம், மெழுகுவர்த்தி ஏற்றி தங்கள் ஒற்றுமையை நிலைநாட்டி, கொரோனாவை ஒழிக்க தன்னம்பிக்கையோடு ஒன்றுபட்டனர். தமிழகத்தில் தருமபுரம் ஆதனம் ஸ்ரீலஸ்ரீ சந்நிதானங்கள்,  துணை முதல்வர் ஓ.பி.எஸ், தலைவர் ரஜினிகாந்த், லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா, நடிகர் சூரி உள்ளிட்டோர் தீபங்கள் ஏற்றினர். 

அந்த வகையில், கேரள முதல்வர் திரு பினராயி விஜயன் அவர்கள் தன் வீட்டில் குடும்பத்தினருடன் இனைந்து மின் விளக்குகளை அணைத்து தீபம் ஏற்றினார்.

தமிழகத்தில் உள்ள கம்யூனிஸ்ட் தலைவர்கள் இந்த நிகழ்வை விமர்சித்து வந்த நிலையில் கேரள கம்யூனிஸ்ட் முதல்வர் தீபம் ஏற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Similar News