ஒரு சொட்டு ரத்தம் கூட சிந்தாமல் அரசியல் எதிரிகளை கொன்று குவிப்பது எப்படி? 2008-இல் பினராயி விஜயனின் ரத்தவெறியாட்டமும் தற்போது முதல்வராக ஹிந்துக்கள் மீது ஏவப்பட்டிருக்கும் அடக்குமுறையும்!
ஒரு சொட்டு ரத்தம் கூட சிந்தாமல் அரசியல் எதிரிகளை கொன்று குவிப்பது எப்படி? 2008-இல் பினராயி விஜயனின் ரத்தவெறியாட்டமும் தற்போது முதல்வராக ஹிந்துக்கள் மீது ஏவப்பட்டிருக்கும் அடக்குமுறையும்!
2014-ஆம் ஆண்டு கேரள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அப்துல்லா குட்டி என்பவர், தற்போதைய கேரள முதல்வர் பினராயி மீது கடும் குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். தான் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த போது, "எதிரிகளை வங்காள முறையில், ரத்தம் சிந்தப்படாமல் கொன்று குவிக்க வேண்டும். எதிரிகளை உப்பு அடங்கிய சாக்கு மூட்டையில் அடைத்து, ஆழமான சாக்கடைக்குள் போட்டு விட வேண்டும். அப்படி செய்தால், ரத்தம் இல்லாமல், எந்த தடையமும் இல்லாமல் வங்காள முறையில் கொன்று விடலாம்", என்று தற்போதைய கேரள முதல்வர் பினராயி கூறியதாக அப்துல் குட்டி 2008-இல் கூறினார் என்று இந்தியா டுடே செய்தி வெளியிட்டிருந்தது.
அப்போது கம்யூனிஸ்டுகள் நடத்திய கொலை வெறியாட்டத்தின் புகைப்படங்களை, அப்போது பா.ஜ.க நாடாளுமன்றத்தில் சமர்பித்ததை அடுத்து பினராயி இவ்வாறு கூறியதாக அந்த செய்தி குறிப்பு தெரிவிக்கிறது. அப்துல்லா குட்டி என்பவர் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த போது, கண்ணூர் நாடாளுமன்ற தொகுதியின் எம்.பி-யாக இரு முறை இருந்தவர். 2009-ஆம் ஆண்டு, குஜராத்தில் மோடி அரசு செய்த சாதனைகளை பற்றி பேசியதால் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்க்கப்பட்டார். பிறகு, காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து, 2009 மற்றும் 2011 தேர்தல்களில் கண்ணூர் சட்டமன்ற தொகுதியிலிருந்து எம்.எல்.ஏ-வாக தேந்தெடுக்கப்பட்டார்.
எனினும் அப்துல்லா குட்டி கூறிய குற்றச்சாட்டுகளை மறுத்தது அப்போதைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்(CPM) கட்சி. கேரள மாநிலத்தில், கடந்த 17 ஆண்டுகளில் மொத்தம் 172 அரசியல் கொலைகள் நடந்துள்ளது என்று தி நியூஸ் மினிட் செய்தி குறிப்பு தெரிவிக்கின்றது. அதில் அதிகப்படியான கொலைகள் கம்யூனிஸ்ட் அரசு கேரளாவை ஆளும் போது தான் நிகழ்ந்துள்ளது. அதிலும் அதிகப்படியான கொலைகள் கேரள முதல்வர் பினராயி விஜயனின் சொந்த ஊரான கண்ணூரில் தான் நிகழ்ந்துள்ளது.
அப்போது கம்யூனிஸ்டுகள் நடத்திய கொலை வெறியாட்டத்தின் புகைப்படங்களை, அப்போது பா.ஜ.க நாடாளுமன்றத்தில் சமர்பித்ததை அடுத்து பினராயி இவ்வாறு கூறியதாக அந்த செய்தி குறிப்பு தெரிவிக்கிறது. அப்துல்லா குட்டி என்பவர் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த போது, கண்ணூர் நாடாளுமன்ற தொகுதியின் எம்.பி-யாக இரு முறை இருந்தவர். 2009-ஆம் ஆண்டு, குஜராத்தில் மோடி அரசு செய்த சாதனைகளை பற்றி பேசியதால் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்க்கப்பட்டார். பிறகு, காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து, 2009 மற்றும் 2011 தேர்தல்களில் கண்ணூர் சட்டமன்ற தொகுதியிலிருந்து எம்.எல்.ஏ-வாக தேந்தெடுக்கப்பட்டார்.
எனினும் அப்துல்லா குட்டி கூறிய குற்றச்சாட்டுகளை மறுத்தது அப்போதைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்(CPM) கட்சி. கேரள மாநிலத்தில், கடந்த 17 ஆண்டுகளில் மொத்தம் 172 அரசியல் கொலைகள் நடந்துள்ளது என்று தி நியூஸ் மினிட் செய்தி குறிப்பு தெரிவிக்கின்றது. அதில் அதிகப்படியான கொலைகள் கம்யூனிஸ்ட் அரசு கேரளாவை ஆளும் போது தான் நிகழ்ந்துள்ளது. அதிலும் அதிகப்படியான கொலைகள் கேரள முதல்வர் பினராயி விஜயனின் சொந்த ஊரான கண்ணூரில் தான் நிகழ்ந்துள்ளது.