எம்எல்ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3 கோடியாக அதிகரிப்பு!! கட்சி வேறுபாடில்லாமல் மகிழ்ச்சியில் துள்ளிய எம்எல்ஏக்கள்!!

எம்எல்ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3 கோடியாக அதிகரிப்பு!! கட்சி வேறுபாடில்லாமல் மகிழ்ச்சியில் துள்ளிய எம்எல்ஏக்கள்!!

Update: 2019-07-20 10:25 GMT


தமிழக சட்டசபையில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, எம்எல்ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.2.50 கோடியில் இருந்து ரூ.3 கோடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.


தமிழக சட்டசபையில் முதலமைச்சர் பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வந்தார். அப்போது அவர் கூறுகையில், எம்எல்ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதி 3 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.


 ஏற்கனவே வழங்கப்ப்ட்டு வந்த ரூ.2.50 கோடியில் இருந்து 50 லட்சம் ரூபாய் அதிகரித்து ரூ.3 கோடி வழங்கப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.  இதற்கு எம்எல்ஏ க்கள் மேஜையை தட்டி வரவேற்பு தெரிவித்தனர். கட்சி பாகுபாடு இல்லாமல் எம்எல்ஏ க்கள் இந்த அறிவிப்பை கேட்டதும் பூரிப்படைந்து புன்னகை பூத்தனர்.  


Similar News