“தமிழ் இல்லாமல் இருந்த ரெயில்வே துறையில் தமிழை கொண்டு வருகிறது மோடி அரசு” - பொன்.இராதாகிருஷ்ணன் பெருமிதம் !!

“தமிழ் இல்லாமல் இருந்த ரெயில்வே துறையில் தமிழை கொண்டு வருகிறது மோடி அரசு” - பொன்.இராதாகிருஷ்ணன் பெருமிதம் !!

Update: 2019-07-13 07:36 GMT


தமிழுக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் கொடுக்கிறது- பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி


முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-


தபால் துறை தேர்வுகள் இனி ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டும் நடத்தப்படும் என மத்திய அரசு சுற்றறிக்கை வெளியிட்டு உள்ளது. ஆனால் எல்லா இடங்களிலும் தமிழுக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை மத்திய அரசு கொடுத்து கொண்டுதான் இருக்கிறது. இதில் யாரும் வருத்தப்பட தேவை இல்லை.


ஏற்கனவே ரெயில்வே துறையில் தமிழ்மொழி இல்லாமல் இருந்தது. அதை மாற்றி தற்போது தமிழை கொண்டு வருகிறது நரேந்திர மோடி அரசு. மொழி சார்ந்து யாரும் எந்த அச்சமும் படத்தேவை இல்லை. மொழி திணிப்பு என்பது கட்டாயம் கிடையாது.


இவ்வாறு பொன்.இராதாகிருஷ்ணன் கூறினார்.


Similar News