'அன்னை' தெரசா: 'சமூக சேவை' எனும் பெயரில் நடந்த மத வியாபாரமும், துன்பம் நிறைந்த இருண்ட யதார்த்தமும்.!
'அன்னை' தெரசா: 'சமூக சேவை' எனும் பெயரில் நடந்த மத வியாபாரமும், துன்பம் நிறைந்த இருண்ட யதார்த்தமும்.!
இந்தியாவில் பெரும்பாலும் ஒரு 'துறவி', 'ஏழைகளின் கடவுள் தூதுவர்' என்று அழைக்கப்படும் 'அன்னை' தெரசா, சாகும் தருவாயில் இருப்பவர்களை மதம் மாற்றுவதில் தொடங்கி, நோயாளிகளை ஒருவருக்கொருவர் எதிராக கழிவறை பயன்படுத்த வைத்தது வரை பல சர்ச்சைகள் மற்றும் குற்றச்சாட்டுகளில் மூழ்கி இருக்கிறார். ஸ்கோப்ஜேயில் (பின்னர் ஒட்டோமான் பேரரசின் ஒரு பகுதியாக) பிறந்த அல்பேனிய கன்னியாஸ்திரியான அவர் கிறிஸ்தவ மதத்தின் ரோமன் கத்தோலிக்க பிரிவைப் பின்பற்றினார். ஒட்டோமான் பேரரசில் வாழ்ந்த சில வருடங்களுக்குப் பிறகு, அவர் அயர்லாந்திற்கும் கடைசியாக இந்தியாவுக்கும் வந்தடைந்தார்.
இந்தியாவில், "சமூக சேவை" என்ற காரணத்தைக் காட்டி மக்களை பலவந்தமாக மதம் மாற்றுவதாக நீண்ட காலமாக குற்றம் சாட்டப்பட்ட 'மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டி' என்ற அரசு சாரா அமைப்பைத் தொடங்கினார். இந்தியாவில் அவருக்கென்று ஒரு கும்பலே (cult) பின்பற்ற இருந்தாலும், வாடிகனால் நேரடியாக ஆதரிக்கப்பட்ட போதிலும், ஹஃபிங்டன் போஸ்ட், நியூயார்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் போன்ற பல அமெரிக்க செய்தி நிறுவனங்கள் தெரசா நடத்திய "மருத்துவமனைகள்" மற்றும் "அனாதை இல்லங்கள்" ஆகியவற்றின் பரிதாபகரமான நிலைமைகளைக் கண்டபோது அவர்களின் அருவருப்பை அடக்க முடியவில்லை.
'அன்னை' யை விமர்சித்ததற்காக பல வருடங்கள் பயந்து வாழ்ந்த பின்னர், டாக்டர் அரூப் சாட்டர்ஜி இறுதியாக தி நியூயார்க் டைம்ஸுக்கு மிஷனரிகளால் நடத்தப்படும் இந்த "மருத்துவமனைகளின்" அருவருப்பான யதார்த்தத்தைப் பற்றிப் பேசினார். டாக்டர் சாட்டர்ஜி கருத்துப்படி, மிஷனரிகளால் நடத்தப்படும் மருத்துவமனைகளில் 'துன்பத்தை வழிபடுவதை(cult of suffering)' கண்டார். மிஷனரிகளால் படுக்கையில் கட்டப்பட்டதால் குழந்தைகள் வேதனையுடன் அலறுவதைக் கண்டார், மேலும் வலியைக் குறைக்க ஆஸ்பிரின் தவிர வேறு எந்த நிவாரணமும் வழங்கப்படாததால் இறக்கும் நோயாளிகள் வலி தாங்காமல் கதறுவதையும் கண்டார்.