7 மற்றும் 9 வயது மகள்களை கற்பழித்து கொலைசெய்த முஸ்லிம் காமகொடூரன்! போக்சோ சட்டத்தில் கைது!!

7 மற்றும் 9 வயது மகள்களை கற்பழித்து கொலைசெய்த முஸ்லிம் காமகொடூரன்! போக்சோ சட்டத்தில் கைது!!

Update: 2019-07-31 07:17 GMT


புனே மாவட்டம் பிம்பிரி, சிஞ்சுவாட் அருகே போசரி பகுதியில் வசித்து வந்தவர் அக்ரம் (வயது 35). இவரது மனைவி பாத்திமா (வயது 28). இவர்களுக்கு ஆலிபியா (9), ஜோயா (7) என்ற 2 மகள்களும்,  ஜியான் (6) என்ற மகனும் இருந்தனர். 


இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வீட்டில் தூக்கில் பாத்திமா தனது 2 மகள்கள் மற்றும் மகனுடன் தூக்கில் பிணமாக தொங்கினர். 





உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்த வீட்டின் கதவை உடைத்து போலீசார் 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரிடம் அக்ரம், “எனக்கு நியைான வருமானம் இல்லாததால் எனது மனைவி, பிள்ளைகளை தூக்கிலிட்டு கொன்றுவிட்டு, அவளும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டாள்” என்றுகூறி நாடகமாடினான்.


இதனை உண்மை என்று நம்பிய போலீசார் அந்த கோணத்திலேயே விசாரணையையும் நடத்தினர். ஊடகங்களிலும் செய்தி இப்படித்தான் வெளியானது.


இந்தநிலையில் அவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், இந்த வழக்கின் போக்கை மாற்றியுள்ளது. அந்த அறிக்கையில் கொலையான சிறுமிகள் ஆலிபியா, ஜோயா இருவரும் கற்பழிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.


இதையடுத்து போலீசார் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத்தடுப்பு பிரிவான ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையை துரிதப்படுத்தினர். அக்ரமை பிடித்து மீண்டும் விசாரணை நடத்தினர். அப்போது அவன் உண்மையை கக்கினார்.


தனது 2 மகள்கள் கணவன் அக்ரமால் கற்பழிக்கப்பட்டதை தெரிந்து அதிர்ச்சியடைந்த பாத்திமா, காமுக கணவன் அக்ரமிடம் சண்டை போட்டுள்ளார். ஆனால் பாத்திமாாவை அவன் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளான். 


பின்னர் காமகொடூரன் அக்ரம், கற்பழிக்கப்பட்ட 2 குழந்தையுடன் மகனையும் சேர்த்து தூக்கில் தொங்க வைத்து துடிதுடிக்க கொலை செய்துள்ளான். பின்னர் வெளியே சென்றுள்ளான். இதை பார்த்தும் தடுக்க முடியாத பாத்திமா, வீட்டு கதவை அடைத்துக்கொண்டு தானும் தூக்கில் தொங்கிஉள்ளார்.


இதனையடுத்து அக்ரமை, கோக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர் அவன் ஜெயிலில் அடைக்கப்பட்டான்.


Similar News