மாநிலங்களவையில் முத்தலாக் நிறைவேற்ற முடியாது என்று சொன்னார்கள் ஆனால் நிறைவேற்றினோம்!

மாநிலங்களவையில் முத்தலாக் நிறைவேற்ற முடியாது என்று சொன்னார்கள் ஆனால் நிறைவேற்றினோம்!

Update: 2019-11-19 04:58 GMT

ராஜ்ய சபாவின் 250 அமர்வு நடைபெறுகிறது. ஆகவே இந்த அமர்வு அதிக முக்கியத்துவம் பெறுகிறது.இதனால்  நடக்கும் அமர்வில் பிரதமர் மோடி பேசினார். ராஜ்ய சபாவின் வரலாறு மற்றும் சிறப்புகள் குறித்து அவர் பேசினார்வரலாற்று சிறப்பு மிக்க இந்த கூட்டத்தில் பேசுவது பெருமையாக உள்ளது, பன்முகத் தன்மையின் பிரதிநிதியாக, கூட்டாட்சி அமைப்பிற்கு முக்கியத்துவம் அளிப்பதாக மாநிலங்களவை உள்ளது.டிரிபிள் தலாக் மசோதா இங்கு நிறைவேற்றப்படாது என்று பரவலாக நம்பப்பட்டது, ஆனால் நிறைவேற்றப்பட்டது.


இந்த அவையில்  ஜி.எஸ்.டி. கூட நிறைவேற்றப்பட்டது.370 மற்றும் 35 (ஏ)  சட்டப்பிரிவு தொடர்பான மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டபோது மாநிலங்களவையின் ஒருபோதும் மறக்க முடியாது.மாநிலங்களவை இரண்டாவது  அவையாக இருக்கலாம், ஆனால் அதை இரண்டாம் நிலை அவை  என்று அழைக்கக்கூடாது என்று அடல்பிகாரி வாஜ்பாய் ஜி குறிப்பிட்டிருந்தார். 



நான் இன்று, தேசியவாத காங்கிரஸ்  மற்றும் பிஜு ஜனதா தளம் ஆகிய இரண்டு கட்சிகளை பாராட்ட விரும்புகிறேன்,இவ்வாறு பேசிய போது அவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது பாரதீய ஜனதா உள்ளிட்ட பிற கட்சிகள் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளலாம் என கூறினார்.Attachments area


Similar News