பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு கொரோனா - கோவிட் என்ற பெயர்..

பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு கொரோனா - கோவிட் என்ற பெயர்..

Update: 2020-04-03 07:59 GMT

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதனால் 9லட்சத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 50ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதனை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு ஊரடங்கு உத்திரவு 21 நாட்கள் விதித்துள்ளது.

இந்நிலையில் சத்தீஸ்கார் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள ஒரு ஜோடிக்கு பெண் - ஆண் இரட்டை குழந்ததைகள் பிறந்துள்ளது. அவர்கள் பெண் குழந்தைக்கு "கொரோனா" என்றும் ஆண் குழந்தைக்கு "கோவிட்" என பெயர் வைத்துள்ளனர்.

ஆனால் அந்த ஜோடி பிறகு குழந்தைகளுக்கு மறு பெயர் வைப்போம் என கூறியுள்ளனர்.

இந்த இரட்டை குழந்தைகள் கொரோனா வைரஸ் தொற்றறை எதிர்த்து வென்று இருப்பதால் அனைவரின் நினைவாக இருக்கும் என இந்த பெயரை வைத்துள்ளனர்.

இதை பற்றி குழந்தைகளின் தாய் ரீத்தி வர்மா கூறுகையில்: மார்ச் மாதம் 27ஆம் தேதி அதிகாலை இரட்டை குழந்தைகள் ஒரு ஆண் - பெண் குழந்தையை பெற்றெடுத்தேன். நாங்கள் தற்போது ஆண் குழந்தைக்கு "கோவிட்" மற்றும் பெண் குழந்தைக்கு "கொரோனா" எனவும் பெயர் வைத்துள்ளோம். பல கஷ்டங்களை எதிர்கொண்டு எனக்கு பிரசவம் நடந்தது. இதனால் தான் நானும் என் கணவரும் வருங்காலத்தில் மறுக்க முடியாமல் இருக்கும் வகையில் இந்தப் பெயரை வைத்தோம்.

இந்த வைரஸால் மக்கள் அனைவரும் சுகாதார மற்றும் நல்ல பழக்கங்களை பின் பற்றி வருகிறார்கள் என்று அவர் கூறினார்.

Source: https://www.dailythanthi.com/News/India/2020/04/03111856/Born-during-lockdown-Raipur-twins-named-Corona-and.vpf 

Similar News