ஒரு கோடி பேர் தரிசனம்! அத்திவரதர், இன்று இரவு ஜலவாசம் செல்கிறார்! தமிழகம் முழுவதும் மழை கொட்டுகிறது!!
ஒரு கோடி பேர் தரிசனம்! அத்திவரதர், இன்று இரவு ஜலவாசம் செல்கிறார்! தமிழகம் முழுவதும் மழை கொட்டுகிறது!!
காஞ்சிபுரத்தில் தொடர்ந்து 47 நாள்களாக நடந்து வந்த அத்திவரதர் பெருவிழாவில் வெள்ளிக்கிழமையுடன் தரிசனம் நிறைவு பெற்றதையடுத்து,வரதராஜப் பெருமாள் கோயிலில் உள்ள அனந்தசரஸ் திருக்குளத்தில் பெருமாள் எழுந்தருளும் நிகழ்ச்சி இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது.இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் மழை கொட்டுகிறது.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் அத்திவரதர் பெருவிழா கடந்த ஜூலை மாதம் முதல் தேதி தொடங்கி ஆக.17 -ஆம் தேதி வரைதொடர்ந்து 48 நாள்களுக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி ஜூலை மாதம் முழுவதும் 31 நாள்களுக்கு பெருமாள் சயனக்கோலத்திலும், ஆக. 1 -ஆம் தேதி முதல் நின்ற கோலத்திலும் பக்தர்களுக்குஅருள்பாலித்தார்.
விழாவின் 47 -ஆவது நாளான நேற்று (வெள்ளிக்கிழமை) பெருமாள் வெந்தய நிறப் பட்டாடையும், ரோஜா நிற அங்கவஸ்திரமும் அணிந்து பக்தர்களுக்குஅருள்பாலித்தார். பெருமாளுக்கென்று பிரத்யேகமாக செய்யப்பட்டிருந்த பாதாம்பருப்பு, முந்திரி மாலையும், கதம்ப மாலைகளும் அணிந்திருந்தார்.
சகஸ்ர நாம அர்ச்சனை கோயில் பட்டாச்சாரியார்களால் நடத்தப்பட்டது.