பாகிஸ்தானில் இருந்தபோது மனைவியிடம் மொபைலில் பேசிய அபிநந்தன்.! நான் போடும் ‘டீ’யை விட சுவையானதா.!

பாகிஸ்தானில் இருந்தபோது மனைவியிடம் மொபைலில் பேசிய அபிநந்தன்.! நான் போடும் ‘டீ’யை விட சுவையானதா.!

Update: 2019-04-02 04:49 GMT

காஷ்மீர் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுத்தபோது பாகிஸ்தான் எல்லைக்குள் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது.


இதனை தொடர்ந்து, இந்திய எல்லை பகுதிக்குள் பாகிஸ்தான் விமானங்கள் வந்தபோது, அதனை இந்திய விமானப்படைகள் விரட்டி சென்றது.


அப்போது விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தான் வசம் சிக்கினார். இதனை தொடர்ந்து அவரை 2 நாட்களுக்கு பின்னர் விடுவித்தது.


இந்நிலையில், பாகிஸ்தானில் இருந்தபோது அபிநந்தன் தனது மனைவியுடன் தொலை பேசியில் பேசியுள்ளார். அவர்கள் பேசிய உரையாடலை ‘தி பிரிண்ட்’ பத்திரிகை செய்தியாக வெளியிட்டுள்ளது.


அப்போது அபிநந்தன் குடித்த டீ பற்றியும் அவரது மனைவி கிண்டல் செய்ததாக தெரிகிறது.


அபிநந்தன் பிடிபட்டதும் பாகிஸ்தான் ராணுவ வீரர் கன்னத்தில் அறைந்துள்ளார். மற்றொரு வீரர் உங்கள் மனைவியிடம் பேசிக்கொள்ளுங்கள் என அபிந்தனிடம் தனது கைப்பேசியை கொடுத்துள்ளார்.


இந்நிலையில், பாகிஸ்தான் எண்ணில் இருந்து அழைப்பு வந்ததும் அபிநந்தன் மனைவி ரெகார்ட் செய்துள்ளார்.


பேசுவது தன் கணவன் அபிநந்தன் என்பதை அவர் உறுதி செய்துள்ளார். பின்னர் எந்த ஒரு பதட்டமும் இன்றி மிகவும் அமைதியாக பேசியுள்ளார்.


தன்வி: நீங்கள் எங்கிருக்கிறீர்கள் என்று குழந்தைகள் கேட்டால், நான் என்ன சொல்ல வேண்டும்?
அபிநந்தன்: நான் ஜெயிலில் இருக்கிறேன் என்று சொல்
தன்வி: அவர்கள் கொடுத்த டீ நல்லா இருந்ததா?
அபிநந்தன்:நன்றாக இருந்தது
தன்வி:நான் போடும் டீயை விடவும் சுவையாக இருந்ததா?
அபிந்நதன்:ஆமாம். சிறந்ததாக இருந்தது (சிரித்துக்கொண்டே)
தன்வி:அப்படி என்றால், டீ தயாரிக்கும் முறையை கேட்டு தெரிந்து வாங்கள்.


Similar News