பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே இன்று இரவு 8 மணிக்கு உரையாற்ற உள்ளார்

பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே இன்று இரவு 8 மணிக்கு உரையாற்ற உள்ளார்

Update: 2020-04-11 13:38 GMT

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர் சந்திப்பில் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம், பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதல் அமைச்சர்களுடன் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை மேற்கொண்டதாகவும், அப்போது பல மாநில முதலமைச்சர்கள் தற்போது உள்ள சூழ்நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் நடைமுறையில் உள்ள ஊரடங்கை இன்னும் சில நாட்களுக்கு நீடிக்க வேண்டுமென பிரதமரிடம் வலியுறுத்தியதாக கூறினார்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே இன்று இரவு 8 மணிக்கு உரையாற்றுவார் என  தகவலையும் தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்தார். அப்பொழுது நாடு தழுவிய ஊரடங்கை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தமிழகத்தில்  இன்று மட்டும் 58 பேர் கொரோனாவால் பாதிப்பு,  ஈரோட்டைச் சேர்ந்த ஒருவர் உயிரிழப்பு என தெரிவித்தார்.

தமிழகத்தில் மொத்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 969, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10 ஆக உயர்கிறது.

Similar News