ஒருவர் கொலை, மற்றொருவர் படுகாயம் : கோவிலில் கொள்ளையடிக்க வந்தவர்களை தடுத்த போது ஏற்பட்ட பரிதாபம்

ஒருவர் கொலை, மற்றொருவர் படுகாயம் : கோவிலில் கொள்ளையடிக்க வந்தவர்களை தடுத்த போது ஏற்பட்ட பரிதாபம்

Update: 2019-05-04 18:23 GMT

தேனி மாவட்டம் சுருளிமலை அருகே பூதநாராயணன் கோவில் ஒன்று உள்ளது. அந்த கோவிலில் கொள்ளையர்கள் சிலர் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். அப்போது கோவிலில் இருந்த இருவர் அவர்களை தடுத்து நிறுத்த முயன்றதால், ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் அவர்கள் இருவரையும் ஆயுதங்களைக் கொண்டு சரமாரியாக தாக்கியுள்ளனர். 


இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.




https://twitter.com/VVR_KrishnaN/status/1124590411341635586?s=19


இதனை அடுத்து கொலையாளிகளை கண்டு பிடிக்க வேண்டும் என்று கொலை செய்யப்பட்டவரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


Similar News