மது கிடைக்காததால் சேவிங் லோசனை குடித்த 2 பேர் துடிதுடித்து உயிரிழப்பு - அன்வர் ராஜாவுக்கு தீவிர சிகிச்சை!
மது கிடைக்காததால் சேவிங் லோசனை குடித்த 2 பேர் துடிதுடித்து உயிரிழப்பு - அன்வர் ராஜாவுக்கு தீவிர சிகிச்சை!
கொரோனா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அத்தியாவசிய தேவைகளான காய்கறி, மளிகை கடை போன்ற ஒரு சிலவை மட்டுமே இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அமலுக்கு வந்த நாள் முதல் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால், கடந்த 10 நாட்களுக்கு மேலாக டாஸ்மாக் கடைகள் பூட்டப்பட்டுள்ளன. இதனால் குடிமகன்கள் பலரும் தவிப்புக்கு ஆளாகி வருகின்றனர். ஒரு சில மது அடிமைத்தனத்தில் இருந்து வெளியே வரும் போது சந்திக்கும் பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மது கிடைக்காததால், புதுக்கோட்டை கோட்டைப்பட்டினத்தில் ஷேவிங் செய்த பிறகு பயன்படுத்தப்படும் லோஷனை குளிர்பானத்தில் கலந்து குடித்த மீனவர்கள் ராஜா, அருண்பாண்டி ஆகியோர் உயிரிழந்தனர். மற்றொரு மீனவரான அன்வர் ராஜாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.