அல்லு அர்ஜுன், ராஷ்மிகா நடிப்பில் மூன்று மொழிகளில் உருவாகும் 'புஷ்பா'.!

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா நடிப்பில் மூன்று மொழிகளில் உருவாகும் 'புஷ்பா'.!

Update: 2020-04-09 12:28 GMT

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். பெரும் ரசிகர் வட்டத்தை வைத்திருக்கும் இவரின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று (08.04.2020) இவர் அடுத்த படமான 'புஷ்பா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. இப்படத்தினை 'ரங்கஸ்தலம்' படத்தினை இயக்கிய சுகுமார் இயக்குகிறார். இவர் ஏற்கனவே அல்லு அர்ஜுனை வைத்து 'ஆர்யா', 'ஆர்யா 2' ஆகிய பிரம்மாண்ட வெற்றி படங்களைக் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

'புஷ்பா' படத்தில் நாயகியாக ராஷ்மிகா நடித்து வருகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். சமீக காலமாகத் தெலுங்கு முன்னணி நட்சத்திரங்கள் தமிழ் திரைத்துறையை நோக்கிப் படையெடுத்து வரும் நிலையில் இந்த படமும் தமிழில் வெளியாகவிருக்கிறது. கேரளாவில் அல்லு அர்ஜுனுக்குப் பெரிய ரசிகர் வட்டம் இருப்பதால் மலையாளத்திலும் இப்படம் வெளியாகிறது. மைத்ரி மூவி மேகர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தினை தமிழக உரிமையைக் கைப்பற்ற பெரும் போட்டி நிலவி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Similar News