தமிழ் கடவுள் முருகனுக்கு வராத ராகுல் பெரியாருக்கு ஓடோடி வந்தார் - இந்து சமுதாய மக்களை புறக்கணிக்கிறாரா ராகுல் காந்தி? #RahulGandhi #Karupparkootam #Periyar

தமிழ் கடவுள் முருகனுக்கு வராத ராகுல் பெரியாருக்கு ஓடோடி வந்தார் - இந்து சமுதாய மக்களை புறக்கணிக்கிறாரா ராகுல் காந்தி? #RahulGandhi #Karupparkootam #Periyar

Update: 2020-07-18 06:58 GMT

எவ்வளவு தீவிரமான வெறுப்பும் ஒரு மகத்தான தலைவனை களங்கப்படுத்த முடியாது என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

கோவை, சுந்தரபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசப்பட்டது. அதேபோல் இன்று கள்ளக்குறிச்சி மாவட்டம், திருகோவிலூர் அருகே கீழையூர் பகுதியில் பெரியார் சிலைக்கு மர்ம நபர்கள் செருப்பு மாலை அணிவித்து அவமானப்படுத்தி உள்ளனர். பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட விஷயம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி

"எவ்வளவு தீவிரமான வெறுப்பும் ஒரு மகத்தான தலைவனை களங்கப்படுத்த முடியாது" என ட்விட் செய்துள்ளார்!.



ஆனால் மக்களிடையே கறுப்பர் கூட்டத்தின் கந்த சஷ்டி விவகாரத்தில் தமிழ் கடவுள் அவமதிப்பு செய்யபட்டபோது இதனை ராகுல் கண்டுகொண்ட மாதிரி தெரியவில்லை. இன்று பெரியார் என்ற உடன் ஓடி வருகிறார் என இந்து சமுதாய மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Similar News