புதுவையை புதுமையாகக்க அனைத்து உதவிகளும் செய்ய தயார்!நாராயணசாமியிடம் அமீத்ஷா உறுதி!!

புதுவையை புதுமையாகக்க அனைத்து உதவிகளும் செய்ய தயார்!நாராயணசாமியிடம் அமீத்ஷா உறுதி!!

Update: 2019-06-11 06:08 GMT


புதுவையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் அம்மாநில முதல்வர் நாராயணசாமி நேற்று டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார்.


இந்த சந்திப்பின்போது புதுவைக்கு நிதி மற்றும் மத்திய அரசு அறிவித்த திட்டங்கள் குறித்து அமித்ஷாவிடம் முதலமைச்சர் நாராயணசாமி கோரிக்கை வைத்தார்.


இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அமைச்சர் அமித்ஷா, கூடிய விரைவில் புதுவைக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளார்.


இது குறித்து நாராயணசாமி தனது டுவிட்டரில் கூறுகையில்“ புதுவைக்கு பெறவேண்டிய நிலுவை நிதி குறித்தும், கடன் தள்ளுபடி தொடர்பாகவும், 7 வது ஊதிய கமிஷன்படி பெறவேண்டிய நிலுவை தொகை குறித்தும் பேசியதாகவும், கூடிய வரை விரைவில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண கோரிக்கை விடுத்ததாக கூறினார்.  


Similar News