அமெரிக்க Exim வங்கி தலைவர் கிம்பர்லி ரீட் கூறுகையில், "சீனாவும் ரஷ்யாவும் இந்த திட்டத்தில் நிதியுதவி வழங்க ஆர்வம் காட்டுவதாக எங்களுக்கு தெரிவிக்கப்பட்டது." என்று தெரிவித்தார்.
ரீட் மேலும் கூறுகையில், "இந்தத் திட்டம், புத்துயிர் பெற்ற Exim வங்கி, அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பொருட்களையும் சேவைகளையும் போட்டி மிகுந்த உலக சந்தையில், சீனா, ரஷ்யா முதலிய நாடுகளை முந்த எப்படி உதவக்கூடும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு" என்று தெரிவித்தார்.
Exim வங்கியில் கடன் உதவியை கொண்டு, வாங்கிக் கொடுக்கப்பட்ட அமெரிக்க உபகரணங்களை ஒரு பிரென்ச் எண்ணெய் நிறுவனமான டோட்டல் LNGயின் உற்பத்தியில் பயன்படுத்தும். சீனாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் இருக்கும் நீண்ட கால இருதரப்பு உறவுகளை எதிர்கொள்வதில், அமெரிக்கா தனியாக இல்லை. ஜப்பான் ஏற்கனவே டோட்டல் LNG திட்டத்திற்கு 'சர்வதேச ஒத்துழைப்புக்கான ஜப்பான் வங்கியின்' மூலம் 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி உதவி செய்துள்ளது.
அமெரிக்கா, தனது செல்வாக்கையும் இடத்தையும் ஆப்பிரிக்காவில் கொண்டு வருவதற்கு இந்த பிப்ரவரி முதலே வேலையை ஆரம்பித்தது. அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ 3 ஆப்பிரிக்க நாடுகளுக்கு விஜயம் செய்தார். செனிகல், அங்கோலா மற்றும் எத்தோப்பியா. சீனா பில்லியன் கணக்கான டாலர்களை இந்த நாடுகளின் உள்கட்டமைப்புத் திட்டங்களில் முதலீடு செய்துள்ளது. பாம்பியோ இத்தகைய 'கடன் கொடுத்து மாட்ட வைக்கும்' சீனாவின் திட்டங்களால் ஏற்படும் சுமையை குறித்து நீண்ட நேரம் பேசினார். சீனாவின் இந்த ராஜதந்திரத்தை எதிர்கொள்ள அமெரிக்கா, ஆப்பிரிக்காவில் தனது திட்டத்தை செயல்படுத்த ஆரம்பிக்கும் என ஒப்புக்கொள்ளப்பட்டது.
அமெரிக்கா மற்றும் ஜப்பானைத் தவிர, இந்தியாவும் ரஷ்யாவும் ஆப்பிரிக்காவில் சீன மேலாதிக்கத்திற்கு சவால் விடுகின்றன. மே மாதத்தில், ரயில்வே அமைச்சகத்தின் கீழ் உள்ள மினிரத்னா பொதுத்துறை நிறுவனமான இந்தியாவின் இர்கான் இன்டர்நேஷனல் லிமிடெட் (IRCON), ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் ரயில்வே மற்றும் பிற உள்கட்டமைப்பு திட்டங்களை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஆராய்வதற்காக அரசுக்கு சொந்தமான ரஷ்ய ரயில்வே நிறுவனத்தின் துணை நிறுவனமான ZD இன்டர்நேஷனல் LLC யுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
சீனாவின் பல கண்டங்களைக் கடக்கும் உள்கட்டமைப்புத் திட்டமான பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சி (BRI) ஆப்பிரிக்கா உட்பட, உலகத்தில் பல பகுதிகளிலும் கடும் எதிர்ப்புகளை கொரானாவுக்கு பிந்தைய காலத்தில் சந்தித்து வருகிறது. இந்த வெற்றிடத்தை நெடுநாளைய பங்காளிகளான ரஷ்யாவும் இந்தியாவும் நிரப்ப முடிவு செய்துள்ளன.
சமீபகாலமாக சீனா ஆப்பிரிக்காவிலிருந்து பல கடும் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது. பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சி திட்டம் தனது வேகத்தை இழந்து வருகிறது, ஏனெனில் கென்யா மற்றும் தான்சானியா ஆகிய நாடுகளில் இருக்கும் சீன திட்டங்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இந்த வருடம் கருப்பர்களுக்கு எதிரான இன வாதமும், சீனாவின் 'கடன் கொடுத்து மாட்ட வைக்கும்' ராஜதந்திரமும் ஆப்பிரிக்காவில் சர்ச்சைக்குரிய பிரச்சனைகளாக மாறின.
சீனாவில், கொரானாவைப் போராடுவதாகக் கூறி ஆப்பிரிக்கர்களுக்கு எதிராக சீன அரசினால் செய்யப்படும் குற்றங்களும், தங்கள் கடனை ரத்து செய்யக்கோரும் ஆப்பிரிக்காவின் கோரிக்கைகளும், சீனாவின் செல்வாக்கினை ஆப்பிரிக்காவில் அழித்து வருகின்றன. மோடி அரசாங்கம் சீனா இழந்துவரும் செல்வாக்கை, இந்தியா பெறுவதற்கு வழிகளை கண்டறிந்து வருகின்றனர். வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், புர்கினோ பாசோ, கொமொரோஸ், உகாண்டா, மாலி, நைஜர், நைஜீரியா ஆகிய நாடுகள் உடனான தனது உரையாடலை தொடர்ந்து விரிவு செய்து வருகிறார்.
பல்லாண்டுகளாக ஆப்பிரிக்கா, உலகத்தின் மிகுந்த புறக்கணிக்கப்பட்ட பகுதியாக இருந்து வந்தது. ஐரோப்பா, ஆப்பிரிக்க கண்டத்தை கண்டு கொள்ளவேயில்லை. இத்தனைக்கும், பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன், இத்தாலி முதலிய முன்னணி ஐரோப்பிய நாடுகளின் பல முன்னாள் காலனிகள் ஆப்பிரிக்காவில் இருக்கின்றன. உதாரணமாக லிபியா, எரித்திரியா, மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, தன்சானியா மற்றும் சூடான்.
ஆப்பிரிக்காவில் தன் வழியை கண்டறிந்து தனது கிளைகளை 'கடன் கொடுத்து மாட்ட வைக்கும்' தந்திரங்கள் மூலமும், வர்த்தகங்களின் மூலமும் சீனா பரவச் செய்தது. எவ்வாறாயினும், தற்போது மற்ற உலக சக்திகளான அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் சீனாவின் சரிந்து வரும் செல்வாக்கின் பின்னணியில் ஆப்பிரிக்காவில் போட்டியிட துவங்கியுள்ளனர். இவ்வாறு பெரிய சக்திகள், சீனாவை ஆப்பிரிக்காவை விட்டு வெளியேற்ற தயாராகி வருகின்றன.
Translated From: https://tfipost.com/2020/08/china-had-colonised-africa-but-then-came-us-india-japan-and-russia-to-kick-it-out/