சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக சங்கத்தின் பங்கு - ஒரு பார்வை.!
சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக சங்கத்தின் பங்கு - ஒரு பார்வை.!
ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கமும் அதனுடைய தலைவர்களும் இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்ற பொய்யை ஊடகங்களும் பா.ஜ.க எதிர்ப்பாளர்களும் ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்பாளர்களும் கூறிவருகின்றனர். ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ராஷ்டிரிய சேவகர்களின் பங்கு என்ன என்று இந்த கட்டுரையில் பார்ப்போம்.
முதலாவதாக 1930ஆம் ஆண்டு, அதாவது ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கம் தொடங்கி ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு மகாத்மா காந்தியால் தொடங்கி வைக்கப்பட்ட சத்தியாகிரகத்தில் டாக்டர் ஹெட்ஜ்வர் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 1929 ஆம் ஆண்டில் டிசம்பர் மாதம் நடந்த கூட்டத்தில் முழு சுதந்திரத்தை அடைவதை தீர்மானமாக நிறைவேற்றியதோடு 1930ஆம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி சுதந்திர தினமாக கொண்டாடப்படும் என்றும் காங்கிரஸ் அறிவித்தது. இதைத்தொடர்ந்து டாக்டர் ஹெட்ஜ்வர் சங்க நிர்வாகிகளுக்கு அனுப்பிய கடிதம் பின்வருமாறு,
"காங்கிரஸ் சுதந்திரம் பெறுவதே தனது குறிக்கோள் என்று அறிவித்துவிட்டது. காங்கிரஸ் செயற்குழுவும் 1930ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் நாளை சுதந்திர தினமாக அறிவித்துள்ளது. இந்த அகில இந்திய அமைப்பு சுதந்திரம் அடைவதற்கான அதன் குறிக்கோளை நெருங்குவது நமக்கு மகிழ்ச்சி தரும் விஷயமே தவிர வேறொன்றில்லை. எனவே காங்கிரசுக்கு ஒத்துழைப்பது நமது கடமை. எனவே அனைத்து ஷாக்காக்களிலும் ஸ்வயம் சேவகர்களைக் கூடச் செய்து மாலை ஆறு மணிக்கு காவிக் கொடியான தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செய்ய வேண்டும்" என்று எழுதியுள்ளார்.
காவி கொடியை தேசியக்கொடி என்று கூறியிருக்கிறாரே என்று விமர்சிக்க விரும்புவர்களுக்கு, 1931 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் காங்கிரஸ் செயற்குழு கூடி தேசியக்கொடியை வடிவமைப்பதற்கான ஒரு குழுவை உருவாக்கியது. இதில் மௌலானா அப்துல் கலாம் ஆசாத்தும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் குழு காவிக் கொடியையே தேசியக் கொடியாக பயன்படுத்த பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது.
எனினும் போராட்ட அரசியலில் இருந்து சங்கம் தள்ளியே இருந்தது. காங்கிரஸ் போராட்டங்களில் மட்டுமல்லாமல் இந்து மகாசபை முன்னெடுத்த போராட்டங்களில் கூட சங்க உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை. அப்போது இந்து மகாசபையில் இருந்த முன்னாள் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் நிஜாமுக்கு எதிராக இந்து மகாசபை நடத்திய போராட்டங்களில் ஆர்.எஸ்.எஸ் பங்கு பெறாததைப்பற்றி கோபம் கொண்டு விமர்சித்தார். அவர் வேறு யாருமில்லை, நாதுராம் விநாயக் கோட்சே தான்.