2 ஜி வழக்கில் மர்ம மரணம் அடைந்த சாதிக் பாட்சா நினைவு நாள் இன்று!! “கூடா நட்பு கேடாய் முடிந்ததே” எனக் கூறி குடும்பத்தினர் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்..!
2 ஜி வழக்கில் மர்ம மரணம் அடைந்த சாதிக் பாட்சா நினைவு நாள் இன்று!! “கூடா நட்பு கேடாய் முடிந்ததே” எனக் கூறி குடும்பத்தினர் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்..!
சாதிக் பாட்சா தற்கொலை செய்யவில்லை, கொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி கடந்த 18/05/2016 அன்று வெளியிட்ட தகவல்களை வைகோ மறந்திருக்கலாம். ஆனால் இந்த வையகம் மறக்காது. சாதிக்பாட்சாவின் குடும்பத்தினர் மட்டும் இந்த கொடிய சம்பவத்தை எப்படி மறந்திருக்க முடியும்.
அவருடைய இன்றைய நினைவு நாளில் செய்தி தாள்களில் இன்று அவர்கள் வெளியிட்டுள்ள நினைவு இரங்கலில் “ கூடா நட்பு கேடாய் முடியும் “ என்ற பழமொழிக்கு உதாரணமாக உங்கள் வாழ்க்கை முடிந்துவிட்டதே என்று கண்ணீரும் கம்பலையுமாய் கதறியுள்ளதை பார்க்கும் போது அனைவரின் நெஞ்சமும் வெடித்து சிதறுவதை போலிருந்தது.
அன்று வைகோ, சென்னை வழக்கறிஞர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் அப்போதைய மத்திய அமைச்சர் ஆ.ராசா மற்றும் திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் துப்பு துலக்க ஆ.ராசாவின் நண்பரும், திமுகவினரின் பினாமி என்று கருதப்பட்டவருமான கிரீன் ஹவுஸ் ப்ரோமோட்டர்ஸ் நிர்வாகி சாதிக் பாட்சாவிடம் விசாரணை நடத்த சிபிஐ நடவடிக்கைகைகளை தொடங்கியது.
இந்த நிலையில், கடந்த 2011ம் ஆண்டு மார்ச் மாதம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனது வீட்டில் சாதிக் பாட்சா பிணமாகக் கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில், திமுக புள்ளிகளின் நெருக்கடியினால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியது.
இந்த நிலையில், திருச்சியில் 17 /05 /2016 அன்று திடீரென செய்தியாளர் சந்திப்பு நடத்திய, அரியலூர் மாவட்டம், அய்யூரை சேர்ந்த பிரபாகரன் என்பவர், தான் தமிழர் நீதிக்கட்சியின் தலைவர் சுப.இளவரசனின் உதவியாளர் என்றும், ஆ.ராசாவின் மைத்துனர் பரமேஸ்குமார், முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஜாபர்சேட் ஆகியோருடன் சேர்ந்து சாதிக் பாட்சாவை கொலை செய்ததாகவும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். மேலும், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால், இந்த ரகசியத்தை தற்போது வெளியிடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.