பாகிஸ்தான் பெண் பத்திரிக்கையாளருடன் சசிதரூர் உல்லாசம் !! மனைவி சுனந்தா மரணத்துக்கு காரணம் இதுதான் !! வெளியான திகில் உண்மைகள்
பாகிஸ்தான் பெண் பத்திரிக்கையாளருடன் சசிதரூர் உல்லாசம் !! மனைவி சுனந்தா மரணத்துக்கு காரணம் இதுதான் !! வெளியான திகில் உண்மைகள்
காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசிதரூர் காங்கிரஸ் மேலிடத்துக்கு மிகவும் வேண்டப்பட்டவர். இவருக்கு திருமண வயதில் இரண்டு பிள்ளைகள் இருந்தும், குடும்பம் இருந்தும் ஜம்முவை சேர்ந்த செல்வந்தர் குடும்ப பெண்ணான சுனந்தா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். ஆரம்பத்தில் சுனந்தாவுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்த சசிதரூர் பிறகு சுனந்தாவுடன் இருந்த நெருக்கத்தை குறைத்துக் கொண்டார்.
இந்த நிலையில், கடந்த 2014 ஆம் ஆண்டு ஜனவரி 17 அன்று இரவு, முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் டெல்லியில் உள்ள ஒரு சொகுசு ஹோட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த மர்ம சம்பவம் தொடர்பாக, இந்திய தண்டனைச் சட்டத்தின் 498-ஏ (கணவர் அல்லது அவரது உறவினர் ஒரு பெண்ணை கொடுமைக்கு உட்படுத்தியது) மற்றும் 306 (தற்கொலைக்குத் தூண்டுதல்) ஆகியவற்றின் கீழ் சசி தரூர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
சுனந்தா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சசி தரூர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. டெல்லி காவல்துறை அனுப்பிய சம்மனுக்கு பின் இவ்வழக்கில் சசி தரூர் ஜாமீன் கோரியிருந்த நிலையில் டெல்லி அமர்வு நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. மேலும் அவர் வெளிநாட்டுக்குச் செல்லக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. பின்னர் பாட்டியாலா நீதிமன்றம் அவரை ரூ.2 லட்சம் பிணைவைப்புத் தொகை செலுத்துமாறு உத்தரவிட்டு அவரை வெளிநாடு செல்லவும் அனுமதித்தது.