சட்டமன்ற உறுப்பினருக்கு கொரோனா என வதந்தி பரப்பிய நபர் கைது.!

சட்டமன்ற உறுப்பினருக்கு கொரோனா என வதந்தி பரப்பிய நபர் கைது.!

Update: 2020-04-16 05:00 GMT

காரைக்கால் வடக்கு தொகுதி திரவுபதி அம்மன் கோவிலை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவரின் நண்பர் பாஸ்கர். இவர்கள் இருவரும் சமூக வலைதளங்களில் காரைக்கல் சட்டமன்ற உறுப்பினர் திருமுருகனை காணவில்லை என்றும் அவரை கண்டுபிடித்து கொடுத்தால் 5 கிலோ அரிசி வழங்கப்படும் என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் திருமுருகனை மருத்துவர்கள் தேடி வருகின்றனர் என பதிவிட்டனர்.


இது குறித்து சட்டமன்ற உறுப்பினரின் உதவியாளர் ராஜ்குமார் காரைக்கால் போலீசில் புகார் அளித்தார் இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆரோக்கியராஜை கைது செய்தனர் மேல தலைமறைவான பாஸ்கரை தேடி வருகின்றனர். 

Similar News