இது தான் 'சக்ரா' படத்தின் கதைக் களம்.!
இது தான் 'சக்ரா' படத்தின் கதைக் களம்.!
அறிமுக இயக்குநர் ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் திரைப்படம் 'சக்ரா'. இப்படத்தினை விஷாலின், விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிக்கிறது. இதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா, ரோபோ ஷங்கர், மனோபாலா, சிருஷ்டி டாங்கே, கே.ஆர்.விஜயா ஆகியோர் நடித்து வருகின்றனர். பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இதன் கதைக் களம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. விஷாலின் தந்தை அசோக சக்ரா விருது பெற்றவர். அந்த அசோக சக்ரா காணாமல் போவதையடுத்து விஷால் அதை எப்படி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கண்டு பிடிக்கிறார் என்பதே திரைக்கதையாம்.
முதலில் 'இரும்புத்திரை 2' எனப் பெயரிடப்பட்ட இப்படம் பின்னர் 'சக்ரா' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.